கருத்துரை அருக்கெணாமலையண்ணலே! மாதராசையால் துன்புற்று உயிர் உழல்வேனோ? திருக்கோணமலை விலைக்கு மேனியி லணிக்கோவை மேகலை தரித்த வாடையி மணிப்பூணு மாகவெ மினுக்கு மாதர்க ளிடக்காம மூழ்கியெ மயலூறி மிகுத்த காமிய னெனப்பாரு ளோதெதிர் நகைக்க வேயுட லெடுத்தேவி யாகுல வெறுப்பதாகிய யுழைத்தேவி டாய்படு கொடியேனைக் கலக்க மாகவெ மலக்கூடி லேமிகு பிணிக்கு ளாகியெ தவிக்காம லேயுனை கவிக்கு ளாய்சொலி கடைத்தேற வேசையு மொருவாழ்வே கதிக்கு நாதனி யுனைத்தேடி யேபுக முரைக்கு நாயெனை யருட்பார்வை யாகவெ கழற்கு ளாகவெ சிறப்பான தாயருள் தரவேணும் மலைக்கு நாயக சிவக்காமி நாயகர் திருக்கு மாரனெ முகத்தாறு தேசிக வடிப்ப மாதொரு குறப்பாவை யாள்மகிழ் தருவேளே வசிட்டர்காசிபர் தவத்தான யோகியர் அகத்திய மாமுநி யிடைக்காடர் கீரனும் வகுத்த பாவினில் பொருட்கோல மாய்வரு முருகோனே நிலைக்கு நான்மறை மகத்தான பூசுரர் திருக்கெ ணாமலை தலத்தாரு கோபுர நிலைக்குள் வாயினில் கிளிப்பாடு பூதியில் வருவோனே |