பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 337

 

உளக்கோயிலில் முருகன் எழுந்தருளியிருப்பான்.

பலமலையுடைய பெருமாளே:-

“சேயோன் மேய மைவரையுலகும்”

என்ற தொல்காப்பிய வாக்கின்படி குறிஞ்சி நிலக்கடவுள் குமரன், எல்லா மலைகளையும் தனக்கு உறைவிடமாகக் கொண்டவன். உயர்ந்தவனை உயர்ந்த இடத்தில் வைப்பார்கள். அதுபோல தெய்வநாயகனைப் பழம் பெருமக்கள் மலைமீது வைத்து வழிபட்டார்கள்.

கருத்துரை

மலைதோறும் மேவிய முருகவேளே! இப் பெண்ணின் தனிமையைத் தீர்த்து ஆட்கொள்வீர்.

201

தறையின் மானுட ராசையி னால்மட
லெழுது மாலருள் மாதர்கள் தோதக
சரசர் மாமல ரோதியி னாலிரு  கொங்கையாலுந்
தளர்மி னேரிடை யாலுடை யால்நடை
யழகி னால்மொழி யால்விழி யால்மருள்
சவலை நாயடி யேன்மிக வாடிம  யங்கலாமோ
பறவை யானமெய்ஞ் ஞானிகள் மோனிகள்
அணுகொணாவகை நீடும ராசிய
பவன பூரக வேகிக மாகிய  விந்துநாதம்
பகரொ ணாதது சேரவொ ணாதது
நினையொ ணாதது வானத யாபர
பதிய தானச மாதிம னோலயம  வந்துதாராய்
சிறைவி டாதநி சாசரர் சேனைகள்
மடிய நீலக லாபம தேறிய
திறல்வி நோதச சேளத யாபர  அம்புராசித்
திரைகள் போலலை மோதிய சீதள
குடக காவிரி நீளலை சூடிய
திரிசி ராமலை மேலுறை வீரகு  றிஞ்சிவாழும்
மறவர் நாயக ஆதிவி நாயக
ரிளைய நாயக காவிரி நாயக