பக்கம் எண் :


366 திருப்புகழ் விரிவுரை

 

“படைத்தளித் தழிக்குந்த்ரிமூர்த்திகள் தம்பிரானே”
                         - (கனைத்ததிர்க்கு) திருப்புகழ்

“மன்னா வயற்பதிமன்னா குறத்தியின்
   மன்னா முவர்க்கொரு              தம்பிரானே”
                                     - (என்னால்பிறக்கவும்) திருப்புகழ்

“அரியா பிரமபுரந்தராதியர் கும்பிடுந் தம்பிரானே”
                                             - (கரிபுரி) திருப்புகழ்

இகரமுமாகி:-

ஓராதார்க்குற்தூரமாகிநின்ற இறைவன் உன்னுவார்க்கு அதி சமீபத்தில் இருக்கின்றான்.

“வீசத்தில் தூர மிலாதது”             - (வேதத்திற்) திருப்புகழ்

எவைகளுமாகி:-

முருகன் அங்கிங் கெனாதபடி எங்கும் நிறைந்து விளங்குபவராதலால் ”எவைகளுமாகி” என்றார்.

“எப்பொருளுமாய” என்றார் பிறிதோரிடத்தில்.

இனிமையுமாகி:-

முருகன் அன்பர்கள் உணர்வில். இனிக்கும் இனியனாய் இலங்குகின்றனன்.

கனியினும் இடினியன்; கடிபட்ட கரும்பினும் இனியன்; பனிமலர்க்குழல் பாவையரினும் இனியன்; தனிமுடி கவித்தாளும் அரசினும் இனியன்; உயிரினும் இனியன்;

கனியினும் கட்டிபட்ட கரும்பினும்
பனிமலர்க்குழல் பாவை நல்லரினும்
தனிமுடி கவித்தாளு மரசினும்
இனியன் நன்னடைந்தார்க்கிடைமருதனே
என்னி லாரு மெனக்கினி யாரில்லை
என்னிலும் மினி யானொரு வன்னுளன
என்னு ளேயுயிர்ப்பாய்ப்புறம் போந்துபுக்
கென்னு ளேநிற்கு மின்னம்ப ரீசனே.                   - அப்பர்

எளியனும் வாழ எனதுமுனோடி வரவேணும்:-

எளியனும் என்ற எச்ச உம்மையால் மற்ற ஆன்மாக்களும் என்று வருவிக்கப்பட்டது. வையகமெல்லாம் வாழவேண்டுவதே ஆன்றோர் மரபு. “வையகமும் துயர் தீர்க” என்றார் திருஞான சம்பந்தர்.

விரைந்து இறைவனைக் காண விரும்புகின்றார் ஆதலின் “ஓடிவரவேணும்”என்று அழைக்கின்றார்.