பற்கட்டதுவிட்டு:- பற்கள் இடையிலே முளைக்கின்றன. இடையிலேயே உதிர்ந்து விடுகின்றன. சத்தியெடுத்து:- சத்தி-வாந்தி. முதுமையால் வாந்தியும் விக்கலும் வந்து துன்புறுத்தும். “.........................................................விக்கி இருமாமுன் மாகாணிக் கேகாமுன் நெஞ்சே ஒருமாவின் கீழரையின் றோது” - கானமேகம். திலதயிலத்திட்டொக்க வெரிக்க:- கொதிக்கின்ற எண்ணெயில் இட்டதுபோல் உடம்பில் எரிச்சல் உண்டாகும். இது ஒரு நோய். திரிபலை:- திரிபலை-தான்றிக்காய், நெல்லிக்காய், கடுக்காய், இந்த மூன்றுஞ் சேர்ந்தது, இது வைத்திய பரிபாஷை. திகழ்புகழ் கற்று:- முருகனுடைய புகழைக்கற்றவர்க்கு இருள்சேர் இருவினையுஞ் சேரா. காலபயந் தீரும்; சீலநலஞ்சேரும்; சித்தியெலாம் எய்தும். “திருப்புகழை கற்பார்க்குச் சித்தியெட்டும் எளிதாமோ” - தணிகைச்சந்நிதிமுறை செனனமறுக்கைக்குப் பரமுத்திக் கருள்தாராய்:- பதமுத்தியினும் சிறந்தது பரமுத்தி. அது பெற்றார் பிறவியைப் பெறார். கலணை விசித்துப் பக்கரை யிட்டு:- கல்லணை-குதிரையின் மீது இருக்கின்ற சேணம். பக்கரை-அங்கவடி. “பக்கரை விசித்ரமணி பொற்கலணை யிட்டநடை படியெனு முக்ரதுரகம்” - திருப்புகழ் கைகொடுவெற்பை:- வெற்பு-மலை. இது இங்கு உவமஆகு யெராக யானையைக் குறிக்கின்றது. தும்பிக்கையுங் கொடுமையும் உடைய மலைபோன்ற யானைகள். களிமயிலைச் சித்திரத்தில் நடத்தி:- இங்கே சூரபன்மனுடன்போர் புரியும்போதே முருகன் மயிலில் ஆரோகணித்திருந்தார் என்று அருணகிரியார் கூறுகின்றார். |