நினைவாகா:- நினைத்தல்-தியானித்தல். வாகு-அழகு, அழகன். சகலமு முதலாகிய அறுபதி:- எல்லாத் தலங்கட்கும் முதன்மை பெற்று விளங்கும் ஆறு திருப்பதிகள். கருத்துரை ஆறு திருப்பதியில் அமர்கின்ற அழகனே! உனது திருவடி பெற அருள்செய். ஈனமிகுத் துளபிறவி யணுகாதே யானுமுனக் கடிமையென வகையாக ஞானஅருட் டனையருளி வினைதீர நாணமகற் றியகருணை புரிவாயே தானதவத் தினின்மிகுதி பெறுவோனே சாரதியுத் தமிதுணைவ முருகோனே ஆனதிருப் பதிகமரு ளிளையோனே ஆறுதிருப் பதியில்வளர் பெருமாளே பதவுரை தான தவத்தினில் மிகுதி பெறுவோனே-அடியார்கள் புரியும் தானத்தின் தகைமையையும் தவத்தின் தியானத்தையும் மிகுதியாகப் பெறுகின்றவரே! சாரதி உத்தமி துணைவ-சரஸ்வதி தேவியாகிய உத்தமியின் சகோதரரே! முருகோனே- முருகக் கடவுளே! ஆனதிருப்பதிகம் அருள் இளையோனே- திருஞானசம்பந்தரை யதிஷ்டித்து தமிழ்மறையாகிய தேவாரப்பதிகங்களைப் பாடிய இளம்பூரணரே! ஆறு திருப்பதியில் வளர்-ஆறுபடை வீட்டுத் திருத்தலங்களில் வளர்கின்ற, பெருமாளே-பெருமையின் மிக்கவரே! ஈனமிகுந்து உளபிறவி அணுகாதே-ஈனமே மிகுந்துள்ள பிறவிக்கடலில் ஆழ்ந்து அழியாமல், யானும் உனக்கு அடிமையென வகையாக அடியேனும் தேவரீருக்கு அடிமை யென்று வகைப்பட்டுள்ள, ஞான அருள்தனை அருளி-மெய்ஞ்ஞான அருளைப் புரிந்து, வினைதீர-அடியேனது வினைகள் நீங்க, நாண மகற்றிப் போய் அருளிய திருவருளை அடியேனுக்குத் தந்தருளிவீர். |