பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 49

 

சந்தான கோட்டின் வழியருளின் பேறு காட்டி:-

சந்தானம் என்ற தரு தெய்வதரு. இது தன்னையடைந்தார்க்கு எல்லாந் தர வல்லது. இதுபோல் விராலிமலையும் தன்னையடைந்து வழிபடும் அடியார்க்கு வேண்டிய வேண்டியாங்கு வழங்க வல்லது.

பாதியேற்றி கடிகமழ் சந்தான கோட்டில் வழியருளின் பேறு காட்டு:-

விராலிமலைக்கு வரும் அடியவர்களை பாதி மலைவரை ஏறச்செய்து, அங்கு நறுமணங் கமழ விளங்கும் சந்தான கோட்டம் என்ற இடத்தில் எம்பிரான் எழுந்தருளியிருக்கின்றார்.

வழிபட்டோர்க்கு எல்லா நலன்களும் அருளுகின்றார்.

கருத்துரை

விராலிமலை முருகா! மாதர் மயக்கத்தில் அழுந்தா வண்ணம் ஆண்டருள்வீர்.

123

ஐந்து பூதமு மாறு சமயமு
                   மந்த்ர வேத புராண கலைகளும்
ஐம்ப தோர்வித்த மான லிபிகளும்                         வெகுரூப
       அண்ட ராதிச ராச ரமுமுயர்
                   புண்ட ரீகனு மேக நிறவனும்
       அந்தி போலுரு வானுநிலவொடு                வெயில்காலும்
சந்தர சூரியர் தாமு மசபையும்
                   விந்து நாதமு மேக வடிவம
                   தன்சொ ரூபம தாக வுறைவது            சிவயோகம்
       தங்க ளாணவ மாயை கருமம
                   லங்கள் போயுப தேச குருபர
                   சம்ப்ரதாயமொ டேயுநெறியது          பெறுவேனோ
வந்த தானவர் சேனை கெடிபுக
                   இந்த்ர லோகம்விபூதர் குடிபுக
                   மண்டு பூதப சாசு பசிகெட                    மயிடாரி
       வன்கண் வீரிபி டாரி ஹரஹர
                   சங்க ராஎன மேரு கிரிதலை
                   மண்டு தூளெழ வேலை யுருவிய          வயலூரா