வெந்த நீறணி வேணி யிருடிகள் பந்த பாசவி கார பரவச வென்றி யானசமாதி முறுகுகல் முழைகூடும் விண்டு மேல்மயிலாட இனியக ளுண்டு காரளி பாட இதழிபொன் விஞ்ச வீசுவி ராலி மலையுறை பெருமாளே. பதவுரை வந்த தானவர்சேனை கெடிபுக-போருக்கு வந்தடைந்த அகர சேனைகள் புகழ்பெறவும், விபூதர் இந்த்ரலோகம் குடிபுக-தேவர்கள் பொன்னுலகத்தில் குடிபுகுந்து இன்புறவும், மண்டு பூத பசாசு பசிகெட-நெருங்கிய பூதங்களும் பைசாசங்களும் பசியாறவும், மயிடஅரி-மகிடாசுரனை வதைத்தவளும், வண்கண் வீரிபிடாரி-கொடிய தொழிலும் வீரமும் உடையவளும் ஆகிய காளிதேவி, ஹரஹரசங்கரா என-அரஹரா! சங்கரா! என்று துதி செய்யவும், மேருகிரி, தலை-மகா மேருகிரியில் உச்சியில் மண்டு தூள்எழ-நெருங்கிய புழுதி உண்டாகவும், வேலை உருவிய-வேலாயுதத்தை விடுத்தருளிய, வயலூரா-வயலூர் என்னுந் திருப்பதியில் எழுந்தருளியுள்ளவரே! வெந்த நீறு அணி-நெருப்பால் வெந்த திருநீற்றைத் தரிக்கின்ற, வேணி இருடிகள்-சடாமகுடத்தையுடைய மாமுனிவர்கள், பந்தபாச விகார பரவச-பந்த பாசத்தில் வசமாகும் தன்மையை, வென்றிஆன-வெற்றிபெற்ற, சமாதி-சமாதி நிலையில், முறுகு கல் முழைகூடும்- முதிர்ந்த கற்குகையில் பொருந்தியுள்ள, விண்டுமேல்-மலையின் மேல், மயில் ஆட-மயில் ஆடவும், இனியகள் உண்டு-இனியதேனைப் பருகி, கார் அளிபாட- கரிய வண்டுகள் பாடவும், இதழி-கொன்றை மரங்கள், பொன் விஞ்சவீசு- பொற்கட்டிகள் போன்ற மலர்களை மிகுதியாக வீசுகின்ற, விராலிமலை உறை- விராலிமலை யென்றுந் திருமலையில் வாழ்கின்ற பெருமாளே-பெருமையின் மிக்கவரே! ஐந்துபூதமும்-மன் நீர் தீ காற்று விண் என்று ஐம்பெரும் பூதங்களும், ஆறு சமயமும்-சைவம் வைணவம் காணாபத்தியம் கொளமாரம் சாத்தேயம் சௌரம் என்ற ஆறு சமயங்களும், மந்த்ர-மந்திரங்களும், வேத- வேதங்களும், புராண-பதினெண்புராணங்களும், கலைகளும், அறுபத்துநான்கு கலைகளும், ஐம்பதோர் விதமான லிபிகளும், ஐம்பத்தொரு வகையான எழுத்துக்களும், வெகுரூப-அநேக உருவங்களுடன் கூடிய, அண்டர் ஆதி- தேவர்கள் முதலிய, சரஅசரமும்-அசைகின்ற உயிர்களும் அசையாத உயிர்களும் ஆகிய யாவும், உயர் புண்டரீகனும்-உயர்ந்த தாமரை மலரில் வாழும் நான்முகக்கடவுளும், மேக நிறவனும்-நீருண்ட நீலமேகம் போன்ற வடிவுடைய நாராயணமூர்த்தியும், அந்திபோல்உருவானும்-அந்தி வானம் போன்ற செம்மேனியுடைய உருத்திர மூர்த்தியும், நிலவொடு |