கார்த்திகை பௌர்ணமியன்று இறைவனை எழுந்தருளப் புரிந்து, கோயிலுக்கு முன் நிறுத்தி, பனை ஒன்றை நிறுவி, ஓலை மூடி, அதில் சிவத்தை ஆவாகனம் புரிந்து கொளுத்துவர். இதனைச் “சொக்கப்பனை கொளுத்துவது” என்கிறார்கள். இது இறைவனை நெருப்பினால் வழிபடுவதாகும். கழையோனி:- சிவபெருமான்மூங்கில் அடியில் முளைத்தருளினார். அதனால் வேய்முத்தர் என்று அவருக்கு ஒரு பேருண்டு. கரவுதாசனாசாரி கர உதாசன ஆசாரி, உதாசனன்-அக்கினி. கையில் நெருப்பை ஏந்தியவர். “வெங்காட்டுள்அனலேந்தி விளையாடும் பெருமானே” - சம்பந்தர்தேவாரம். பரசுபாணி:- பரசு--மழு. மழுவையேந்தியவர். “பரசு பாணியர்” -சம்பந்தர். பானாளி:- பான்--நடுஇரவு. “நள்ளிருளில்நட்டம் பயின்றாடு நாதனே” - திருவாசகம் “கழுது கண்படுக்கும்பானாள்” - பரஞ்சோதியார். கணமொடாடி:- இறைவர் மகாசம்மார ஊழியாகிய நள்ளிருளில் நடம் புரிவார். பேய்கள் முதலிய சிவகணங்கள் அவருடன் ஆடும். கா யோகி:- கா--காப்பாற்றுகின்ற, அகில வுலகங்களையுங் காப்பாற்றுபவர். சிவபெருமான்சிறந்த யோகமூர்த்தி. அதனால் நான்கு முறை யோகி என்று கூறுகின்றார். “காயோகி, சிவயோகி, பரம்யோகி, மாயோகி” என்று அழகிய சொற்களால் அருண கிரிநாதர் சிவபெருமானைக் கூறியருளுகின்றார். ‘நான் மறைபாடும்பரமயோகி” - சம்பந்தர். பசுவேறி:- பசு என்பது கட்டுப்பட்டது என்ற பொருளையுடையது. “பசு ஏறும் எங்கள்பரமன்” -(பலபலவேடமாகும்) சம்பந்தர் தேவாரம்.. பரத மாடி:- ப-பாவம்; ர-ராகம்; த-தாளம். |