பக்கம் எண் :


66 திருப்புகழ் விரிவுரை

 

இந்த மூன்றுடன்கூடியது பரதம். பரத நாடகம் புரியும் ஆசிரியர் சிவமூர்த்தி.

“நிமிதமென முழவொலி முழங்கச் செங்கைத்
   தமருகம ததிர் சதியொடன்பர்க் கின்பத்
   திறமுதவு பரதகுரு”               - (அமுதுததிவிட) திருப்புகழ்.

கானாடி:-

சர்வ சங்கார காலத்தில் மகாமயானமாகிய காட்டில் இறைவன் தன்னந்தனியில் நடனம் புரிவான்.

வயோதிகாதீக:-

வயோதிக அதீத. சிவபெருமான் என்றும் இளைவர்.

பரமஞான ஊர்பூத அருள்வாயே:-

புகுத என்ற சொல் பூத என்று வந்தது. சிவலோகம் அடைய அருள் செய்க என்று விண்ணப்பம் செய்கின்றார்.

சுருதியாடிதாதா:-

பிரமன் சதாவேதங்களை ஓதுபவர். அதனால் அவர் வேதன் எனப்படுவார்.

மூதேவிதுரக:-

துரக-அகல. மூதேவியானவள் போரின் அதிர்ச்சியால் அகன்று ஓடிவிட்டாள்.

சுரதினோடு:-

சுரத்தினோடு-என்ற சொல் சுரதினோடு என வந்தது. சுரம் போல் ஓசை செய்து வாய்கிழியும்படி சூரபன்மன் அழுது மாண்டான்.

திகிரி மாதிராவாரதிகிரி:-

திகிரி வட்டமாகிய திசைகளை மூடிய சக்கிரவாளகிரி, மாதிர ஆவாரம். ஆவரம்-மூடுதல்.

வானீப:-

வான்-தூய்மை. நீபம்-கடப்பம்.

கருணைமேரு:-

முருகப்பெருமான் கருணையில் மேரு போன்றவான்.

கருத்துரை

விராலிமலையுறை வேலவரே! சிவலோகம் அடைய அருள்வீர்.