காமாத்திர மாகி யிளைஞர்கள் வாழ்நாட்கொடுபோகியழகிய காதாட்டிய பார இருகுழை யளவோடிக் கார்போற்றவழோதிநிழல்தனிலார்வாட்கடையீடுகனகொடு காலேற்றுவை வேலின் முனைகடை யமதூதர் ஏமாப்பற மோக வியல்செய்து நீலோற்பல ஆசில் மலருட னேராட்டவி நோத மிடும்விழி மடவார்பால் ஏகாப்பழி பூணு மருளற நீதோற்றிமு னாளு மடிமையை யீடேற்றுத லாலுன் வலிமையை மறவேனே சீமாட்டியு மாய திரிபுரை காலாக்கினி கோப பயிரவி சீலோத்தமி நீலி சுரதிரி புவனேசை சீகார்த்திகையாய அறுவகைமாதாக்கள்குமாரனெனவெகு சீராட்டொடு பேண வடதிசை கயிலாசக் கோமாற்குபதேசமுபநிடவேதார்த்தமெய்ஞ்ஞானநெறியருள் கோதாட்டிய ஸ்வாமி யெனவரு மிளையோனே கோடாச்சிவபூஜை பவுருஷமாறாக் கொடைநாளு மருவிய கோனாட்டுவி ராலி மலையுறை பெருமாளே. பதவுரை சீமாட்டியும்ஆய திரிபுரை-பெருமாட்டியாகிய மூன்று உலகங்கட்கும் தலைவியும், கால அக்கினி-உகாந்த காலத்தில் தோன்றும் நெருப்பு போன்ற, கோப பயிரவி-கோபத்தையுடைய பயிரவியும், சீல உத்தமி-நல்லொழுக்கமுள்ள உத்தமியும், நீலீ-நீலி நிறமுடையவரும், சுர திரிபுவன ஈசை-விண்ணுலக முதலிய மூன்று புவனங்கட்குத் தலைவியும், ஆய பார்வதியும், சீ கார்த்திகை ஆய- பெருமையுடைய கார்த்திகையாய, அறுவகை மாதாக்கள் குமாரன் என- ஆறுவகைப் பெண்களும் குமாரன் என்று, வெகு சீராட்டொடு பேண-மிகவும் பாராட்டுடன் உம்மை வளர்க்க, வடதிசை கயிலாய கோமாற்கு-வடதிசையில் உள்ள கயிலாயமலைக்குத் தலைவராகிய சிவபெருமானுக்கு, உபநிட வேத அர்த்த மெய்ஞான நெறி அருள்-உபநிடதம் வேதம் இவற்றின் பொருளான உண்மையான மார்க்கத்தை உபதேசித்து, கோது ஆட்டிய ஸ்வாமி என வரும் இளையோனே-குற்றத்தை நீக்கிய குருமூர்த்தியென விளங்குகின்ற, இளையவரே! கோடா சிவ பூஜை-நெறி தவறாத சிவ பூஜையும், பவுருஷம்-ஆண்மையும், மாறாகொடை நாளு மருவிய-இல்லையென்னாத கொடையும் பொருந்தியுள்ள, கோனாட்டு விராலி |