பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 67

 
126

காமாத்திர மாகி யிளைஞர்கள் வாழ்நாட்கொடுபோகியழகிய
காதாட்டிய பார இருகுழை                               யளவோடிக்
கார்போற்றவழோதிநிழல்தனிலார்வாட்கடையீடுகனகொடு
காலேற்றுவை வேலின் முனைகடை                   யமதூதர்
ஏமாப்பற மோக வியல்செய்து நீலோற்பல ஆசில் மலருட
னேராட்டவி நோத மிடும்விழி                       மடவார்பால்
ஏகாப்பழி பூணு மருளற நீதோற்றிமு னாளு மடிமையை
யீடேற்றுத லாலுன் வலிமையை                   மறவேனே
சீமாட்டியு மாய திரிபுரை காலாக்கினி கோப பயிரவி
சீலோத்தமி நீலி சுரதிரி                                 புவனேசை
சீகார்த்திகையாய அறுவகைமாதாக்கள்குமாரனெனவெகு
சீராட்டொடு பேண வடதிசை கயிலாசக்
கோமாற்குபதேசமுபநிடவேதார்த்தமெய்ஞ்ஞானநெறியருள்
கோதாட்டிய ஸ்வாமி யெனவரு                   மிளையோனே
கோடாச்சிவபூஜை பவுருஷமாறாக் கொடைநாளு மருவிய
கோனாட்டுவி ராலி மலையுறை                   பெருமாளே.

பதவுரை

சீமாட்டியும்ஆய திரிபுரை-பெருமாட்டியாகிய மூன்று உலகங்கட்கும் தலைவியும், கால அக்கினி-உகாந்த காலத்தில் தோன்றும் நெருப்பு போன்ற, கோப பயிரவி-கோபத்தையுடைய பயிரவியும், சீல உத்தமி-நல்லொழுக்கமுள்ள உத்தமியும், நீலீ-நீலி நிறமுடையவரும், சுர திரிபுவன ஈசை-விண்ணுலக முதலிய மூன்று புவனங்கட்குத் தலைவியும், ஆய பார்வதியும், சீ கார்த்திகை ஆய- பெருமையுடைய கார்த்திகையாய, அறுவகை மாதாக்கள் குமாரன் என- ஆறுவகைப் பெண்களும் குமாரன் என்று, வெகு சீராட்டொடு பேண-மிகவும் பாராட்டுடன் உம்மை வளர்க்க, வடதிசை கயிலாய கோமாற்கு-வடதிசையில் உள்ள கயிலாயமலைக்குத் தலைவராகிய சிவபெருமானுக்கு, உபநிட வேத அர்த்த மெய்ஞான நெறி அருள்-உபநிடதம் வேதம் இவற்றின் பொருளான உண்மையான மார்க்கத்தை உபதேசித்து, கோது ஆட்டிய ஸ்வாமி என வரும் இளையோனே-குற்றத்தை நீக்கிய குருமூர்த்தியென விளங்குகின்ற, இளையவரே! கோடா சிவ பூஜை-நெறி தவறாத சிவ பூஜையும், பவுருஷம்-ஆண்மையும், மாறாகொடை நாளு மருவிய-இல்லையென்னாத கொடையும் பொருந்தியுள்ள, கோனாட்டு விராலி