பழியைக்கொண்டிருந்த மயக்கம் எனைவிட்டு அகலத்தேவரீர் என்முன் தோன்றி முன்னால் ஆட்கொண்டு உய்யுமாறு செய்த கருணையின் வலிமையை ஒருபோதும் மறவேன். விரிவுரை காமாத்திரம்:- மன்மதபாணம்உயிர்களை மயக்குவதுபோல், பொது மாதர்களின் கண்கள் இளைஞர்களை மயக்கும் வலிமையுடையது. வாழ்நாளையுண்ணும் கொடுமையுடையது. இருகுழை அளவோடி:- கண்கள் நீண்டு காது வரை ஓடிப்புரள்வன. யமதூதர் ஏமாப்பற:- இயம தூதர்கள்கண்களைப்பார்த்து, இக்கண்கள் புரியும் கொடுமைக்கு நாம் எம்மாத்திரம் என்று இறுமாப்பு ஒழிகின்றார்கள். ஏகாப்பழி பூணுமருளற நீ தோற்றிமு னாளுமடிமையை ஈடேற்றுத லாலுன் வலிமையை மறவேனே:- இது அருணகிரியாரது சரித்திரக் குறிப்பு. சுவாமிகள் உலக நெறியில் உழன்று துன்மடைந்தபோது, முருகவேள் அவர்முன் தோன்றி கருணைபுரிந்து ஆட்கொண்டருளினார். “இத்தகைய கருணைத் திறத்தை அடியேன் ஒருபோதும் மறவேன்” என்று நன்றியுணர்வுடன் நவில்கின்றார். கோடாச்சிவபூசை பவுருஷ மாறாக் கொடை நாளு மருவிய கோனாடு:- விராலிமலை கானாட்டில் உள்ள திருமலை. அந்தக் கோனாட்டில் உள்ளவர்கள், குன்றாத சிவபூசையும், ஆண்மையும், இடையறாத கொடைக்குணங்களும் உடையவர்கள். கருத்துரை விராலிமலையுறை முருகா! உமது கருணைத் திறத்தை ஒரு போதும் மறவேன். கொடாதவனை யேபு கழ்ந்து குபேரனெனவேமொ ழிந்து குலாவியவ மேதிரிந்து புவிமீதே |