பக்கம் எண் :


76 திருப்புகழ் விரிவுரை

 

“ஆவேசநீரைக் குடீத்த துட்டர்கள்” -(ஆசாரவீன) திருப்புகழ்

காயாத பால் நெய்..........................அச்சுதன்:-

இந்த மூன்று அடிகளில் பாகவதத்தில் கண்ணபிரான் செய்த திருவிளையாடல்களை எடுத்து இனிது கூறுகின்றார்

“அளைதயிர் பாலுண்டு கண்டுபிடிக்கப் பிடியுண்டு
   ஆப்புண்டிருந்தானால்..................................................அடியுண்டழுதனால்.”
                                                       - பெரியாழ்வார்.

கருத்துரை

விராலி மலை முருகா! மாதர் மயக்கம் கொடியது. அது கூடாது.

129

மாலசை கோப மோயாதெ நாளு
மாயா விகார வழியேசெல்
மாபாவி காளி தானேனு நாத
மாதா பிதாவு மினிநீயே
நாலான வேத நூலக மாதி
நானோதி னேனு மிலைவீணே
நாள்போய் விடாம லாறாறு மீதில்
ஞானோப தேச மருள்வாயே
பாலா கலார ஆமோத லேப
பாடீர வாக அணிமீதே
பாதாள பூமி யாதார மீன
பானீய மேலை வயலூரா
வேலா விராலி வாழ்வே சமூக
வேதாள பூத பதிசேயே
வீரா கடோர சூராரி யேசெ
வேளே சுரேசர் பெருமாளே.

பதவுரை

பாலா-இளைமையானவரே! கலார ஆமோத-செங்குவளை மலரில் பிரியமானவரே! அணிமீதே பாடீர லேப வாக-ஆபரணங்களின் மீது சந்தனக்கலவைப் பூச்சு அணிந்துள்ள அழகரே! பாதாள பூமி ஆதார- பாதலத்துக்கும் பூதலத்துக்கும் பற்றுக் கோடானவரே! மீன பானீய மேலை வயலூரா-மீன் நிறைந்த நீர்சூழ்ந்த மேலை வயலூரில் வாழும் வள்ளலே! வேலா-வேலாயுதரே! விராலி வாழ்வே-விராலி மலையில்