விராலிமலை (திருச்சியிலிருந்து மதுரைபோகும் வழியில் 20ஆவது மைலில் உள்ளதலம். சிறியமலை. மலைமேல் ஆறுமுகத்துடன் முருகன் கோயில் கொண்டுள்ளார். திருச்சி, மணப்பாறை முதலிய பல ஊர்களிலிருந்தும் பஸ்வசதி உண்டு. மயில்கள் அதிகம்.) சீரான கோல கால நவமணி மாலாபி ஷேக பார வெகுவித தேவாதி தேவர் சேவை செயுமுக மலராறும் சீராடு வீர மாது மருவிய ஈராறு தோளு நீளும் வரியளி சீராக மோது நீப பரிமள இருதாளும் ஆராத கால் வேடர் மடமகள் ஜீமுத மூர்வ லாரி மடமகள் ஆதார பூத மாக வலமிட முறைவாழ்வும் ஆராயு நீதி வேலு மயிலுமெய்ஞ் ஞானாபி ராம தாப வடிவமும் ஆபாத னேனு நாளுனிவைது பெறவேணும் ஏராரு மாட கூட மதுரையில் மீதேறி மாறி யாடு மிறையவர் ஏழேழு பேர்கள் கூற வருபொரு ளதிகாரம் ஈடாய வூமர்போல வணிகரி லூடாடி யால வாயில் விதிசெய்த லீலாவி சார தீர வரதா குருநாதா கூராழி யால்முன் வீய நினைபவ னீடேறு மாறு பானு மறைவுசெய் கோபால ராய னேய முளதிரு மருகோனே கோடாம லார வார அலையெறி காவேரி யாறு பாயும் வயலில் கோனாடு சூழ்வி ராலி மலையுறை பெருமாளே. |