பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 81

 

விரிவுரை

மேகமெனுங் குழல் சாய்த்து:-

பொது மகளிர்போன்ற இருண்ட கூந்தலைத் தொங்கவிட்டு வீதியில் நின்று இளைஞர்களை வசப்படுத்துவர்.

“அலங்கை மென்குழலாய்வார் போலே
   சந்திநின்றய லூடே போவார்
   அன்பு கொண்ட நீரோ போரீர்.                    அறியீரோ”

இரு கோகனகங் கொடுகோத்து:-

கோகனகம்-தாமரை;உவமை ஆகுபெயரைக் கண்ணைக் குறிக்கின்றது.

தாமரை மலர்போன்ற விழியால் மருட்டி ஆடவரை ஈர்த்து மயக்குவர்.

தனங்களின் மேற்றுயில் கூறினு மம்புயதாட்டுணை மறவேனே:-

“முருகா! மாதர்மீது அன்புகொண்டு அவர் வசமாகி அவரைத் தழுவி உறங்கினாலும் உமது திருவடியை ஒரு சிறிதும் மறவேன்” என்று சுவாமிகள் கூறுகின்றார்.

“கண்டுண்ட சொல்லியர் மெல்லியர் காமக் கலவிக்கள்ளை
   மொண்டுண் டயர்கினும் வேல்மறவேன்”                  -கந்தரலங்காரம் (37)

மூவுலகுந் தொழுதேத்திட வுறைவோனே:-

முருகவேள் மூவர் தேவாதிகள் தம்பிரான் ஆதலின் சுவர்க்கம், பூதலம், பாதலம் என்று மூன்று உலகத்தவர்களும் வணங்கித் துதிசெய்கிறார்கள்.

“நவலோக முங்கைதொழு நிசதேவ லங்கிருத”
                                      -(சிவனார்மனங்) திருப்புகழ்

மேருவையம்பினில் வீழ்த்திய மோகன:-

மேருவைச்செண்டால் எறிந்த திருவிளையாடல். இதனைத் திருப்புகழ் விரிவுரை முதல் தொகுதி 69-ம்பக்கத்தில் காணலாம்.

சங்கரி வாழ்த்திட:-

சங்கு அரி. சங்கையேந்திய திருமால்.

இளந்தலை காத்து:-

இந்திரன்புதல்வனாகிய சயந்தன் சிறையில் கிடந்து துன்புற்றபோது, ஆறுமகப்பெருமான் அவன் கனவில் தோன்றி அருள்புரிந்தார்.

அவன் சிறை மீள அருளி, அமரலோக வாழ்வும் வழங்கினார்.