பதவுரை தெனந்தெ னந்தெந் தெந்தெந் தெந் தெந் னானா-தெனந்தெந் தெந்தெந் தெந்தெந் தெந்தெனானா என்று, செறிந்து அடர்ந்தும் சென்றும்-நெருங்கிச் சென்று, பண்பின், தும்பி பாட-நல்ல முறையில் வண்டுகள் பாட, குனிந்து இலங்கும்-வளைந்து விளங்கும், கொம்பும்-கொம்புகளும், கொந்தும் துன்று சோலை-பூங்கொத்துக்களும், நெருங்கிய சோலை சூழ்ந்துள்ள, பொழும்திண்- செழுமையும் திண்மையும் உடைய, கொடுங்குன்றம் தங்கும்-கொடுங்குன்றத்தில் வீற்றிருக்கும், தம்பிரானே-தனிப்பெரும் தலைவரே! அனங்கன்-மன்மதனுடைய, அம்பு ஒன்று அஞ்சும் தங்கும்-பொருந்திய கணைகள் ஐந்து தங்குகின்ற, கண்களாலே - கண்களினாலும், அடர்ந்து எழும் பொன்குன்றம்-நெருங்கி எழுந்துள்ள பொன்மலையும், கும்ப குடமும் போன்ற கொங்கையாலே- தனங்களினாலும், முனிந்து-கோபங்கொண்டு, மன்றம் கண்டும்-பொதுச் சபை ஏறியும், தண்டும்-தமக்குரிய பொருளை வசூலிக்கும், பெண்களாலே-பொது மாதர்களினால், முடங்கும் என்றன்-முடக்கம் அடைந்த அடியேனுடைய, தொண்டும் கண்டு இன்று இன்பு உறாதோ-தொண்டினையும் கண்டு இன்று உமது திருவுள்ளம் இன்பம் அடையாதோ? பொழிப்புரை தெனந் தெனந்தெந் தெந்தெந் தெந்தெனானா என்று ஒலி செய்து கொண்டு ஒன்றுகூடீ நெருங்கிச் சென்று நல்ல முறையில் வண்டுகள் பாட, அப்பாடலைக் கேட்டு வளைந்து விளங்கும் கொம்புகளும் பூங்கொத்துகளும், நெரு்கிய சோலைகள் சூழ்ந்தசெழுமையும் திண்மையும் உடைய கொடுங்குன்றத்தில் எழுந்தருளியுள்ள தனிப் பெருந்தலைவரே! மன்மதனுடைய பொருந்திய ஐந்து கணைகளுந் தங்குகின்ற கண்களினாலும், நெருங்கி யெழுகின்ற, கோபித்து நியாய குடத்தையும் ஒத்த தனங்களினாலும், கோபித்து நியாய சபையேறிப் பொன்னை வசூலிக்கும் விலைப் பெண்களினால் தடைபடுக்கின்ற அடியேனுடைய தொண்டினைக் கண்டு இன்று தேவரீருடைய திருவுள்ளம் மகிழ மாட்டதோ? விரிவுரை அனங்கண்:- அங்கம்-சரீரம். மன்மதன் சிவபெருமானுடைய நெற்றிக் கண்ணால் எரிந்தான். இரதிதேவி வேண்டி முறையிட்டாள். சிவபெருமான் மன்மதனை யெழுப்பி, இரதிக்கு மட்டும் உருவமுள்ளவனாகவும், மற்றவர்க்கு அருவமாகவும் இருந்து |