எதிரில் போர்புரிவதுபோல் மூடப்பட்டுள்ள, கடின கச்சுக்களும் பொருது- கடினமான இரவிக்கையுடன் போர் செய்து, குத்தி திறந்து அதைக்குத்தித் திறந்து கொண்டு? மலை இவை என வதி-மனையே இவை என்று கூறும்படி இருக்கின்றவனவும், ம்ருகமதம் பட்டு நின்று ஒழுகி-கஸ்தூரி பூசப்பட்டு அதில் நின்று ஒழுகவும், முத்து செறிந்த வடம் எனும் நிகளம் அவை அற-முத்து நிறைந்த மாலையாகிய சங்கிலிகள் இற்றுப் போகும்படி, உதைத்திட்டு அணைந்து-இடித்து அணைந்து, கொத்தும் பாகர்-அங்குசத்துடன் நெருங்குகின்ற பாகர்களாகிய காமுகர்கள், எதிர் பரவ-எதிரில் நின்று போற்ற, உரமிசை துகைத்து கிடந்து-மார்பை மிதித்து உழக்கிக் கிடந்து, உடல் பதைக்க கடிந்து-கண்டவர்களின் உடல் பதைக்கும்படி அடக்கி, மிக இரதிபதி-நன்றாக இரதிதேவியின் கணவனாகிய மன்மதனுடைய, மணியவுலி எற்றி-மணி மகுடத்தை மோதியும், த்ரியம்பகனும் உட்க-முக்கண்ணனும் அஞ்சும்படி, திரண்டு இளகி-பருத்தும் இளகியும், இளைஞர் உயிர் கவளம் என- இளைஞர்களின் உயிரையே உண்ணுங்க கவளமாகக் கொண்டும், மட்டித்து அசைந்து-வட்ட வடிவுடன் நின்று அசைந்தும், எதிர் புடைத்து-முன்னே பருத்தும், சினந்து பொரு-கோபித்துப் போர்புரிகின்ற, கொங்கை யானை-யானை போன்ற கொங்கைகளை, பொதுவில் விலை இடும் மகளிர்-பொதுவான இடத்தில் நின்று விலைக்கு விற்கும் மாதர்களுடைய, பத்ம கரம் தழுவி-தாமரை போன்ற கரங்களைத் தழுவி, ஒக்கதுவண்டு-ஒரு சேர நெகிழ்ந்து, அமளி புக இணைய-படுக்கையில் சென்று சேர, வரி பரவு-வரி பரந்துள்ள, நச்சு கரும் கயல்கள்-நச்சுத்தன்மையுள்ள, கயல் மீன் போன்ற கண்கள், செக்க சிவந்து- நன்கு சிவக்கவும், அமுது கொதியும் மொழி பதற-அமுதம் கொண்ட சொற்கள் குழறவும், அளக கற்றையும் குலைய-கூந்தற்கட்டு குலைந்து அவிழவும், முத்துத்து உடல்-முத்தமிடுவதுடன், கருணை தந்து மேல் வீழ்-அன்பு செய்து மேலே விழுகின்ற, புதுமைதரு கலவி வலையில் பட்டு அழுந்தி-புதுமையான இன்பத்தைத் தருகின்ற புணர்ச்சி வலையில் அகப்பட்டு, உயிர் தட்டுபடும்-உயிர் தடைப்பட்டு, திமிர புணரி உததியில மறுகி-இருண்ட ஆசைப் பெருங்கடலில் பெருங்கடலில் சுழன்று, மட்டு அற்ற-அளவில்லாத, இந்திரிய சட்டை குரம்பை- இந்திரியந் தங்கும் சட்டையாகிய இந்த உடல், அழிபொழுதினாலும்-அழிகின்ற போதிலும், அருள் முருக- |