பக்கம் எண் :


திருப்பரங்குன்றம்3

தில்தரவல்ல வள்ளலே! எல்லா மொழிகளுக்கும் முற்படுமாறு இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ் நூல் முறைமையை மலைகளுக்குள் முதன்மையுடைய மகாமேருகிரியில் எழுந்தருளிய முதன்மையானவரே! (தேவர்கள் வேண்ட) திரிபுரங்களைச் சிரித்தெரி கொளுத்திய சிவபெருமான் எழுந்தருளிய பெரியத் தேரினுடைய அச்சை (தன்னை நினையாத காரணத்தால்) ஒடித்துத் துகள் செய்த மிகுந்த தைரியமுடையவரே! இன்பரச சக்தியாகிய வள்ளி பிராட்டியாரைத் திருமணம் புரிந்து உயிர்களுக்கு இன்பத்தை யருளவேண்டுமென்று கருணைகொண்டு, தினைவனத்திற்குச் சென்ற குமாரக் கடவுள் வள்ளி பிராட்டியார் இசையாமையால் (இவ்வேளை துணைசெய்ய வேண்டுமென நினைக்க) யானை வடிவங்கொண்டு சென்ற குறவர் குடியிற்றோன்றிய வள்ளி நாயகியாருடன் என்று மிளைய பெருமாளாகிய அறுமுகக் கடவுளை மணம் புணர்த்தி திருவருள் பாலித்த பெருமையிற் சிறந்தவரே! என்று துதி செய்தால் (துன்பத்தை விளைவிப்பதாகிய) வினைகளனைத்தும் விரைவில் விலகும். (ஆதலால்) ஊமத்த மலரையும், பிறைச் சந்திரனையுஞ் சடாமகுடத்தில் கருணைகொண்டு சூடிக்கொண்டுள்ள பாவங்களை யழிப்பவராகிய சிவபெருமானது திருக்குமாரரும், மல்யுத்தம் புரிகின்ற திரண்ட தோள்களையுடையவரும், மதங்களைப் பொழிகின்ற யானை முகத்தை யுடையவருமாகிய விநாயக மூர்த்தியை, மத்தளம் போன்ற அழகிய திருவுதரத்தை யுடையவரை, உத்தமியாகிய உமாமகேஸ்வரியாரது அருட் புதல்வரை தேன் துளிக்கும் புதுமலர்களால் அர்ச்சித்து (வினைகள் விலகும் பொருட்டு அன்புடன்) வணங்குவேன்.

விரிவுரை

இத்திருப்புகழிலுள்ள உயிர் எழுத்துக்களை மட்டும் கூட்டினால் 200 எழுத்துக்களாகும். 100 என்பதைப் பிள்ளையார் என்று சொல்வது (சில ஊர்களில்) மரபு. அதனால் இத்திருப்புகழை இரட்டைப் பிள்ளையார் என்பார்கள்.