பக்கம் எண் :


திருப்பரங்குன்றம்5

கண்ணுதற் கடவுள் தேவர்களுக்கு நேர்ந்த இவ்வையத்தை நீக்கத் திருவுளங்கொண்டு, சர்வலோகங்களையும் ஒரு நொடிப் பொழுதினுள் வலம் வரவும், எல்லாவற்றையும் அறியவும், படைக்கவும், காக்கவும், அழிக்கவும், மறைக்கவும், அருளவும், வல்லவர் முழுமுதற் கடவுளாம் முருகக்கடவுள் ஒருவரே என்று தேவரும் யாவரும் தெளிந்துய்யக்கருதி ஓருபாயஞ் செய்வாராயினர்.)

“நீவிர் இருவரும் ஒரு கனியைக் கேட்பின் எவ்வாறு உதவுவோம். நும்மில் எவர் ஒரு கணத்துள் அகில உலகையும் வலம் வருகின்றனரோ அவருக்கே இப் பழம் உரியதாகும்” என்று திருவாய் மலர்ந்தனர். இச்சொல் முடியுமுன்னரே சர்வலோக நாயகராகிய சரவணோற்பவர் மரகதமயில் மீதூர்ந்து விரைவிற் சென்றனர். வாயுவேகம், மனோவேகம் என்று சொல்லப்பெற்ற வேகங்கள் அவர் போன வேகத்திற்கு ஓரணுத் துணையேனும் ஒவ்வா. அப்பரமன் சேர்ந்த வேகத்தை அறையவல்லார் யாவர்? அதலம், விதலம், சுதலம் மகாதலம், தராதலம், இரசாதலம், பாதலம் என்னும் ஏழனையும், அவற்றிற்கு மேலுள்ள எட்டிலக்கம் யோசனை தூரமுள்ள கனிட்டம் என்னும் எட்டாவது பாதலத்தையும், பூமிக்கணுள்ள சத்ததீவம், கடல்கள், மலைகள், முதலியவைகளையும், மேகம், வாயு, சூரிய, சந்திர, நட்சத்திர மண்டலங்களையும், துருவ நட்சத்திரமுள்ள புவர்லோகம், இந்திரன் வாழும் சுவர்லோகம், மார்க்கண்டேயர் முதலான முனிவர் குழாம் வசிக்கும் சனலோகம், பிதிரர் வாழும் தவலோகம், சனகாதியர் தவம் புரியும் மகாலோகம், சதுர்முகன் வாழும் சத்தியலோகம், வடபத்திரசயனன் வாழும் வைகுண்டலோகம் முதலிய வுலகங்களையும், இங்ஙனமே பிரமாண்டங்களையும், பிருதிவி அண்டத்திலுள்ள ஆயிரங்கோடி அண்டங்களையும், அப்பு அண்டம், தேயு அண்டம், வாயு அண்டம், ஆகாய அண்டம், தன்மாத்திராண்டம், அகங்கார புவன முத