|       அனுமதி 
        - உடன்பாடு; அரவினைக் கொல்லுதற்கு இறைவன் அருளிப்பாடு. மதிகொடு - மதித்தல் கொண்டு; சிந்தித்து. அடைகின்ற
 மாறன் ஏகிக் குறுகாமுன் என்க. நிகர்தரு - எதிர்ந்த;
 
        
          | "நிகர்த்து மேல்வந்த 
            வேந்தனொடு" |  என்பது தொல்காப்பியம். 
        (14) 
        
          | [எழுசீரடியாசிரிய 
              விருத்தம்]  |   
          | பல்பொறிப் 
            பகுவாய்ப் படம்புடை பரப்பிப் பக்கமெண் டிசையொடு விசும்பிற்
 செல்கதிர் புதைத்துத் திணியிருள் பரப்பித்
 திங்களின் பகிர்புரை நஞ்சம்
 பில்கெயி றதுக்கிப் பெரிதுயிர்த் தகல்வாய்
 பிளந்துமா நகரெலா மொருங்கே
 ஒல்லெனக் கௌவி விழுங்குவான் சீறி
 யுருத்தன னுரகவா ளவுணன்.
 |       (இ 
        - ள்.) உரகவாள் அவுணன் - பாம்பின் வடிவாகிய கொடிய அவுணன், பல்பொறிப் பகுவாய்ப் படம்புடை பரப்பி - பல பொறிகளையும்
 பிளந்த வாயையுமுடைய படங்களைப் பரப்பி, பக்கம் எண் திசையொடு -
 எட்டுத் திக்குகளாகிய பக்கங்களோடு, விசும்பில் செல் கதிர் புதைத்து -
 வானிற் செல்லுகின்ற சூரியனையும் மறைத்து, திணி இருள் பரப்பி - செறிந்த
 இருளை விரித்து, திங்களின் பகிர்புரை - சந்திரனது பிளவினை ஒத்த, நஞ்சம்
 பில்கு எயிறு அதுக்கி - நஞ்சினை உமிழும் பல்லினை அதுக்கி, பெரிது
 உயிர்த்து - பெருமூச்சு விட்டு அகல் வாய் பிளந்து - அகன்ற வாயைப்
 பிளந்து, மாநகர் எலாம் ஒருங்கே ஒல்லெனக் கௌவி விழுங்குவான் -
 பெரிய நகர் முழுதையும் ஒரு சேர விரைந்து கௌவி விழுங்குதற்கு, சீறி
 உருத்தனன் - சீறிச் சினந்தான்.
       ஒல்லென 
        : விரைவுக் குறிப்பு. விழுங்குவான் : வினையெச்சம். (15)  
        
	| அடுத்தன னரச சிங்கவே றிடியே றஞ்சவார்த் தங்கையிற் சாபம்
 எடுத்தன னெடுநா ணிருதலை வணக்கி
 யெரிமுகக் கூாங்கணை தொடுத்து
 விடுத்னன் விடுத்த சரமெலா முரகன்
 வெறுந்துகள் படக்கறித் துமிழ்ந்து
 படுத்தனன் பொறாது பஞ்சவன் புராரி
 பங்கயச் சேவடி நினையா.
 |       (இ 
        - ள்.) அரச சிங்க ஏறு அடுத்தனன் இடி ஏறு அஞ்ச ஆர்த்து - அரசருள் ஆண் சிங்கம் போன்ற பாண்டியன் நெருங்கி இடியேறும் அஞ்சப்
 பெருமுழக்கம் செய்து, அங்கையில் சாபம் எடுத்தனன் நெடு நாண் இருதலை
 வணக்கி - அழகிய கையில் வில்லை எடுத்து நீண்ட நாணினால்
 |