|  (அவ்வில்லின்) இரண்டு 
        தலையையும் வளைத்து, எரிமுகக் கூர்ங்கணை தொடுத்து விடுத்தனன் - கூரிய தீ முகக் கணைகளைப் பூட்டி விடுத்தனன்;
 விடுத்த சரம் எலாம் - (அங்ஙனம்) விடப்பட்ட கணைகளனைத்தையும்,
 உரகன் வெறுந்துகள்படக் கறித்து உமிழ்ந்து படுத்தனன் - பாம்பின் வடிவாய
 அவுணன் வெறிய தூளாமாறு கடித்து உமிழ்ந்து சிதைத்தான்; பஞ்சவன் -
 (அதனைக் கண்ட) பாண்டியன், பொறாது - மனம் பொறாமல், புராரி பங்கயச்
 சேவடி நினையா - சோம சுந்தரக் கடவுளின் தாமரை மலர் போன்ற சிவந்த
 திருவடிகளைச் சிந்தித்து.
       எடுத்து 
        வணக்கி நாணிலே கணை தொடுத்து என்றுமாம். அடுத்தனன், எடுத்தனன் என்பன முற்றெச்சம். புராரி - புரப்பகைவன்; முப்புரங்களை
 யெரித்தவன். (16)
 
         
          | கொடியதோர் 
            பிறைவா யம்பினை விடுத்துக் கோளரா வளையுட றுணித்தான்
 இடியதோ வெனவார்த் தெரிநிறக் குருதி
 யிரங்கிவீ ழருவியிற் கவிழ
 நெடியதோ ருடலம் புரள்படக் கூர்வா
 னெளிதர விளிபவன் மேலைக்
 கடியதோ ரால காலவெள் ளம்போற்*
 கக்கினான் கறையிரு ணஞ்சம்.
 |       (இ 
        - ள்.) கொடியது ஓர் பிறை வாய் அம்பினை விடுத்து - கொடியதாகிய ஒரு பிறை போலும் வாயினையுடைய கணையை எவி, கோள்
 அரா வளை உடல் துணித்தான் - வலிய பாம்பினது நெளிந்த உடலைத்
 துண்டுபடுத்தினான்; இடியதோ என ஆர்த்து - இடியொலியோ என்று ஐயுறப்
 பேரொலி செய்து, எரி நிறக்குருதி - தீயின் நிறம் போன்ற குருதி, இரங்கி
 வீழ் அருவியில் கவிழ - ஒலித்து வீழ்கின்ற அருவி போல ஒழுகவும்,
 நெடியது ஓர் உடலம் புரள்பட - நீண்டதாகிய ஒப்பற்ற உடல் புரளவும்,
 கூர்வால் நெளிதர - கூரியவால் நெளியவும், விளிபவன் - இறக்கின்ற
 அவ்வவுணன், மேலைக் கடியது ஓர் ஆலகால வெள்ளம் போல் -
 முன்னாளிற்றோன்றிய கடியதாகிய ஒப்பற்ற ஆலகால நஞ்சின் பெருக்குப்
 போல், கறை இருள் நஞ்சம் கக்கினான் - கரிய இருள் போன்ற நஞ்சினைக்
 கக்கினான்.
       இடியதோ, 
        அது : பகுதிப் பொருள் விகுதி. கொடியது, நெடியது, கடியது என்பன எச்சமாயின. ஓர் என்பன அசைகளுமாம். ஆர்த்து
 விளிபவன் கக்கினான் என்க. (17)
 
         
          | தீவிட முருத்துத் 
            திணியிருள் கடுப்பத் திருநக ரெங்கணுஞ் செறிந்த
 காவிடங் கூவல் கயந்தலை சதுக்கங்
 கழகமா வணமக ழிஞ்சி
 |  
      (பா 
        - ம்.) * ஆலாகல வெள்ளம்போலக்.   |