|  லன்றி, இக்கொடிய 
        வெம்பாசம் - இந்தக் கொடிய வெவ்விய பாசமாகிய கடலை, புரைஇல் கேள்வியால் கடப்பது - குற்றமில்லாத நூற்கேள்வியினால்
 கடக்கக் கருதுதல், உரவு நீர்க்கடல் கரங்கொடு நீந்துவது ஒக்கும் - வலிய
 நீரினையுடைய கடலைக் கையினால் நீந்திக் கடக்கக் கருதுதலை ஒக்கும்.
 
         
          | இறைவன் கரவுடையார்க் கறிவரியன் 
            என்பதனை, ழுகரவாடும் வன்னெஞ்சர்க் கரியானைழு
 |  
 
         
          | ழுபொக்க மிக்கவர் பூவுநீ ருங்கண்டு நக்கு நிற்ப னவர்தமை நாணியேழு
 |  என்னும் தேவாரங்களானறிக. கொடிய வெம், 
        ஒரு பொருளில் வந்த இரு
 சொல். நீந்துவதொக்கும் என்றது முடியா தென்றவாறு. (14)
 
         
          | என்றவ் 
            வாதவூர்*மறையவ ரின்பவீ டெய்தத் துன்று மாசையாற் றொடக் குண்டு சுருதியா கமநூல்
 ஒன்று கேள்வியோர் வருந்தொறு முணர்ந்தவ ரிடைத்தாஞ்
 சென்று காண்டொறு மளவளாய்த் தேர்குவா ரானார்.
 |       (இ 
        - ள்.) என்று அவ்வாதவூர் மறையவர் - என்று கருதி அவ்வாதவூரராகிய அந்தணர், இன்பவீடு எய்தத்துன்றும் ஆசையால்
 தொடக்குண்டு - பேரின்ப வீட்டினை அடைய வேண்டுமென்னும் மிக்க
 ஆசையினாற் கட்டுண்டு, சுருதி ஆகம நூல் ஒன்று கேள்வியோர்
 வருந்தொறும் - வேதமும் ஆகமமுமாகிய நூல்களிற் பொருந்திய
 கேள்விவல்லுநர் தம்மிடம் வருந்தோறும், உணர்ந்தவர் இடை தாம் சென்று
 காண்தொறும் - அவற்றை உணர்ந்தாரிடந் தாஞ்சென்று காணுந்தோறும்,
 அளவளாய்த் தேர்குவார் ஆனார் - அவர்களோடு கலந்து
 ஆராய்வாராயினர்.
      
        மேல் நான்கு பாட்டிலும் சொன்னவற்றைச் சுட்டி என்று என்றார். கேள்வியோர் நகர்க்கு வருந்தொறும் உணர்ந்து அவரிடைத் தாம் சென்று
 காண்டொறும் என்றுரைத்தலுமாம்;
 
         
          | ழுவளங்கெழு புவியி னுள்ள வாவியுங் 
            காவு மோடி விளங்கிசை வண்டு தண்டேன் மிகுமலர் தேடு மாபோல்
 உளங்கொள நிமல னன்னூ லோதின ருண்மை யெல்லாம்
 அளந்தறி வுணர்ந்த நீரார் யாவரென் றாயு நாளில்ழு
 |  என்பது வாதவூரடிகள் 
        புராணம். (15)  
         
          | எண்ணி லாரிடத் 
            தளந்தளந் தறிபொரு ளெல்லாம் உண்ணு நீர்விடாய்க் குவரிநீ ருண்டவ ரொப்ப
 அண்ண லாரகத் தமைவுறா தரசனுக் குயிருங்
 கண்ணு மாயமைச் சுரிமையுங் கைவிடா தியல்வார்
 |  
 (பா 
      - ம்.) * என்றிவ்வாதவூர்.
 |