| 
        
	| செய்யதாண் மாறிநட மாடியதும் புழியஞ்சு திறனுந் தாயை
 மையலாற் புணர்ந்தமகன் பாதகத்தை
 மாற்றியது மதியா தாசான்
 தையலாள் தனைவிரும்பி மாணவனை
 வாளமரிற் றடிந்த வாறும்
 பையரா வெய்ததுவும் படிற்றமணர்
 விடுத்தபசுப் படுத்த வாறும்.
 |       (இ 
        - ள்.) செய்யதாள் மாறி நடம் ஆடியதும் - சிவந்த திருவடிமாறி ஆடியதும், பழி அஞ்சுதிறனும் - பழியஞ்சிய வகையும், தாயை - தன்
 தாயை, மையலால் - காம மயக்கத்தினாலே, புணர்ந்த மகன் - சேர்ந்த
 மகனுடைய, பாதகத்தை மாற்றியதும் - மாபாதகத்தைத் தீர்த்ததுவும்,
 மதியாது ஆசான் தையலான் தனைவிரும்பும் மாணவனை - ஆராயாது
 குரவன் பன்னியை விரும்பிய மாணவனை, வாள் அமரில் தடிந்தவாறும் -
 வாட்போரில் வெட்டின தன்மையும், படிற்று அமணர் விடுத்த -
 வஞ்சனையுடைய அமணர்கள் ஏவிய, பை அரா எய்ததுவும் - படத்தை
 யுடைய நாகத்தை எய்ததுவும், பசுப் படுத்த வாறும் - மாயப்பசுவை
 வதைத்த தன்தையும் எ - று.
       மதியாது 
        - பொருளாக்காது எனலுமாம். படுத்தல் - கோறல். (6)  
        
	| அறவேற்றுப் பரியுகைத்து மெய்க்காட்டுக் கொடுத்தவிளை யாட்டுங் காட்டுச்
 சுறவேற்றுக் கொடி*யரசன் றனக்குலவாக்
 கிழிகொடுத்த தொடர்பு நாய்கர்
 நறவேற்ற மலர்க்குழலார் மனங்கவர்ந்து
 வளைபசர்ந்த நலனு மாறு
 மறவேற்கண் மாதரார்க் கட்டமா
 சித்திபெற வகுத்த வாறும்.
 |       (இ 
        - ள்.) 
        அற ஏற்றுப் பரி உகைத்து - தரும விடையாகிய புரவியைச் செலுத்தி, மெய்க்காட் கொடுத்த விளையாட்டும் - மெய்க்
 காட்டிட்ட திருவிளையாட்லும், காட்டுச் சுறவு ஏற்றுக்கொடி அரசன் தனக்கு
 - நீரில் வாழும் ஆண்சுறாவை எழுதிய கொடியை யுடைய பாண்டி
 மன்னனுக்கு, உலவாக் கிழி கொடுத்த தொடர்பும் - உலவாக்கிழி யருளிய
 தொடர்ச்சியும், நாய்கர் நறவு ஏற்ற மலர்க் குழலார் - வணிகருடைய
 தேன்பொருந்திய மலர்களையணிந்த கூந்தலை யுடைய மகளிரின், மனம்
 கவர்ந்து - மனத்தைக் கவர்ந்து, வளை பகர்ந்த நலனும் - வளையல் விற்ற
 நன்மையும், மற வேல் கண் ஆறு மாதரார்க்கு - வீரவேல் போலுங்
 கண்களையுடைய ஆறு மகளிருக்கு, அட்டமா சித்தி பெற வகுத்தவாறும் -
 அட்டமாசித்தி உபதேசித் தருளிய தன்மையும் எ - று.
 
      (பா 
        - ம்.) * நாட்டுஞ் சுறவேற்றுக்கொடி.   |