| 
	
	| வீசி மாத்திரைக் கோலினை விண்ணினட் டதன்மேல் ஊசி நாட்டியிட் டூசிமேற் பெருவிர லூன்றி
 ஆசி லாடியு மூசிமேற் றலைகிழக் காக
 மாசில் சேவடிப் போதுவான் மலர்ந்திடச் சுழன்றும்.
 |        (இ 
        - ள்.) மாத்திரைக் கோலினை விண்ணில் வீசிநடடு அதன் மேல் ஊசி நாட்டி இட்டு - மாத்திரைக் கோலை வானிலே வீசி நிறுத்தி
 அக்கோலின்மேல் ஊசியை நாட்டிவைத்து, ஊசிமேல் பெருவிரல் ஊன்றி
 ஆசில் ஆடியும் - அந்த ஊசியின்மேற் பெருவிரலை ஊன்றி நுண்ணிதின்
 ஆடியருளியும், ஊசிமேல் -அவ் வூசியின்மேல், தலை கிழக்கு ஆக மாசுஇல்
 சேவடிப் போதுவான் மலர்ந்திடச் சுழன்றும் - தலைகீழாகவும் குற்றமற்ற
 சிவந்த திருவடித்தாமரை வானின்கண் மலரவும் சுழன்றாடியும்.
       மாத்திரை 
        - அளவு; குறுந்தடியை மாத்திரைக் கோலென்பது வழக்கு;  
        
          | "மாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோ 
            லொக்குமே" |  என்பது காண்க. இட்டு 
        : அசைநிலை. ஆசு - நுட்பம்; ஆசுஇல் - துன்ப மில்லையாக என்றுமாம். கிழக்கு என்பது முதற்கண் இப் பொருளில்
 வழங்கியே பின் திசைப் பெயராயிற்று; மேற்கு என்பதும் இவ்வாறே. போது
 என்றதற் கேற்ப மலர்ந்திட என்றார். மலர்தல் ஈண்டு மேல்நோக்கியிருத்தல்.
 (13)
 
         
          | சண்ட வெம்பணிப் 
            பகையெனப் பறந்துவிண் டாவிக் கொண்ட லைப்பிடித் திடியொடுங் குடித்தநீர் பிழிந்து
 கண்ட வர்க்கதி சயம்பெறக் காட்டியுங் காண
 விண்ட லத்தினிற் பண்டுபோ லிறைகொள விடுத்தும்.
 |        (இ 
        - ள்.) சண்ட வெம்பணிப் பகை எனப் பறந்து - கடிய செல வினையுடைய கொடிய பாம்பின் பகையாகிய கலுழனைப்போலப் பறந்து,
 விண் தாவி - வானிற்றாவி, கொண்டலைப் பிடித்து - முகிலைப் பற்றி,
 இடியொடும் குடித்த நீர் பிழிந்து - இடியோடு கடலிற் பருகிய நீரினைப்
 பிழிந்து, கண்டவர்க்கு அதிசயம் பெறக் காட்டியும் - பார்த்தவர்க்கு
 வியப்புத் தோன்றக் காண்பித்தும், காண - அவர்கள் காண, விண்
 தலத்தினில் பண்டுபோல் இறை கொள விடுத்தும் - வானின்கண்
 முன்போலவே தங்கும்படி அதனை விடுத்தும்.
       சண்டம் 
        - வன்மை; கலுழனுக்கு அடை. இடியொடும் பிழிந்து காட்டி யென்க. (14)
 
	
	| எல்லி டைப்படும் பொருள்களை யிராவெழப் பார்த்தும் அல்லி டைப்படும் பொருள்களைப் பகல்வர வமைத்தும்
 வல்ல ழற்புன லுளர்வளி வலிகெடப் பார்த்தும்
 நல்ல போதுகாய் கனியிலா நாள்படக் கண்டும்.
 |  |