|  கன்னியராய்ப் பொற்புத்திரியாது 
        அவதரிப்பீர் வணிகர் மகளிராய் அழகு சிறிதும் குறைபடாது தோன்றுவீர்கள் போம் - செல்லுங்கள், என்று இட்ட
 சாபம் கேட்டு - என்று அளித்த சாபத்தினைக் கேட்டு, அன்பு திரிந்தார் -
 நாயகனிடத்து வைத்த அன்பு வேறுபட்ட அம்மகளிர், எங்களுக்கு ஈது
 அகல்வது எப்போது என - எங்கட்கு இச் சாபம் நீங்குவது எப்பொழுது
 என்று வினவ, முனிவர் அம் முனிவர்கள்.
       கருத்து 
        திரிந்தீர் என்பது விளியுமாம். திரிந்தாலனைய என்பது திரிந்த என நின்றது. அவதரிப்பீர் - பிறக்க் கடவீர்கள். போம் - போமின்;
 பன்மையேவல். அற்பு : வலித்தல். திரிந்தார் : பெயர். (16)
 
	
	      | அந்த மாட 
            மதுரைநகர்க் கரசா கியசுந் தரக்கடவுள் வந்து நும்மைக் கைதீண்டும் வழியிச் சாபங் கழியுமெனச்
 சிந்தை தளர்ந்த பன்னியருந் தென்னர் மதுரைத்                                   தொன்னகரிற்
 கந்த முல்லைத் தார்வணிகர் காதன் மகளி ராய்ப்பிறந்தார்.
 |       (இ 
        - ள்.) அந்த மாட மதுரை நகர்க்கு மரசு ஆகிய சுந்தரக் கடவுள் வந்து - மாடங்கள் நெருங்கிய அம் மதுரைப் பதிக்கு இறைவனாகிய
 சோமசுந்தரக் கடவுள் வந்து, நும்மைக் கைதீண்டும் வழி இச் சாபம் கழியும்
 என - உங்களைக் கைதீண்டும் பொழுது இந்தச் சாபம் நீங்குமென்று கூற,
 சிந்தை தளர்ந்த பன்னியரும் - (அச்சாபத்தால்) மனம் வாடிய முனி
 பன்னியரும், தென்னர் மதுரைத் தொல் நகரில் - பாண்டியரின் மதுரையாகிய
 தொன்மையுடைய நகரின்கண், கந்த முல்லைத் தார் வணிகர் - மணம்
 பொருந்திய முல்லை மலர் மாலையை யணிந்த வணிகர்களின், காதல்
 மகளிராய்ப் பிறந்தார் - அன்புடைய புதல்வியராய்த் தோன்றினார்கள்.
      கைதீண்டல் 
        - கையாற்றொடுதல் : சாபத்தாற் சிந்தை தளர்ந்த வென்க; தம் கற்பிற்கு இழுக்குண்டானமை கருதித் தளர்ந்த என்றுமாம். முல்லைமாலை
 வணிகர்க்குரித்து. (17)
 
	
	      | வளர்ந்து 
            பேதை யிளம்பருவ மாறி யல்குற் புடையகன்று தளர்ந்து காஞ்சி மருங்கொசியத் ததும்பி யண்ணாந்                                     தரும்புமுலை
 கிளர்ந்த செல்லும் பருவத்திற் கிடைத்தா ராக விப்பான்மண்
 அளந்த விடையான் வந்துவளை பகரும் வண்ண                                      மறைகிற்பாம்.
 |       (இ 
        - ள்.) வளர்ந்து பேதை இளம் பருவம் மாறி - வளர்ந்து இளமையாகிய பேதைப்பருவங் கடந்து, அல்குல் புடை அகன்று -
 அல்குலானது புடை பரக்க, காஞ்சிமருங்கு தளர்ந்து ஒசிய - மேகலை
 யணிந்த இடையானது தளர்ந்து வளையுமாறு, அரும்புமுலை - அரும்பிய
 கொங்கைகள், ததும்பி அண்ணாந்து கிளர்ந்து செல்லும் - விம்மி நிமிர்ந்து
 புரித்து ஓங்கும், பருவத்தில் - மங்கைப் பருவத்தில், கிடைத்தாராக -
 அடைந்தாராக; இப்பால் - இப்புறம், மண் அளந்த விடையான் வந்து - புவியை அளந்த திருமாலாகிய 
        இடப வூர்தியையுடைய இறைவன் வந்து,
 வளை பகரும் வண்ணம் அறைகிற்பாம் - வளையல் விற்குந் தன்மையைக்
 கூறுவாம்.
 |