| 
        
          | "நாட்ட மூன்றவன் 
            நாம வாள்கொடு நல்ல ருட்டுணை யாய்வழி காட்ட அன்பெனு மிவுளி மேல்கொடு கங்குல்வாய் வருவான்"
 |  என்று கூறினமையுங் காண்க. 
        (18) 
        
          | [கலிவிருத்தம்] 
                |   
          | காப்புச் 
            செய்து* கதவில் விடைக்குறி யாப்புச் செய்தமைத் தீர்ஞ்சடைச் சித்தர்போய்த்
 தூப்புக் கைவரை சூழ்வட மேருவிற்
 கோப்புச் செய்தபொற் கோயிலின் மேயினார்.
 |       (இ 
        - ள்.) காப்புச் செய்து - முன் திறந்த கதவினைச் சாத்தி, கதவில் விடைக்குறி யாப்புச்செய்து அமைத்து - அதன்கண் இடப முத்திரையைப்
 பொறித்தமைத்து, ஈர்ஞ்சடைச் சித்தர்போய் - குளிர்ந்த சடையையுடைய
 சித்தசாமி யென்று, தூப்புக் கைவரை சூழ் - துளையையுடைய
 துதிக்கையையுடைய யானைகள் சூழ்ந்து நின்று சுமக்கும், வடமேருவில்
 கோப்புச் செய்த - வடக்கின்கண் உள்ள மேருமலையைப்போல் இயற்றிய,
 பொன் கோயிலில் மேயினார் - அழகிய விமானத்தின்கண் எழுந்தருளினார்.
      தூம்பு, 
        தூப்பு என வலித்தது; அடை. கைவரைசூழ் மேருவின் என இல்பொருளுவமை யாக்கலுமாம். கோப்புச்செய்த - ஒழுங்குற இயற்றிய. (19)
 
        
	| கங்கு லின்கருங் கைகுறைப் பானெனச் செங்கை நீட்டித் தினகரன் றோன்றலும்
 எங்க ணாயக னிட்ட குறியறிந்
 தங்கண் வாயி றிறப்பவ ரையுறா.
 |       (இ 
        - ள்.) கங்குலின் கருகை குறைப்பான் என இரவாகிய அரக்கியின் கருமையாகிய கையினைத் தறிப்பவன்போல, தினகரன் செங்கை நீட்டித்
 தோன்றலும் - சூரியன் சிவந்த கிரணமாகிய கைகளை நீட்டித் தோன்றுதலும்,
 அங்கண் வாயில் திறப்பவர் - அவ்விடத்து அவ்வாயிலைத் திறப்பவர்கள்,
 எங்கள் நாயகன் இட்ட குறி அறிந்து ஐயுறா - எங்கள் பெருமானாகிய
 சோமசுந்தரக்கடவுள் இட்ட விடைக் குறியினைக்கண்டு ஐயுற்று.
 
       கருங்கை 
        செங்கை என்றது சொல் முரண். (20)  
        
	| மற்றை வாயில்கண் மூன்றினும் வல்லைபோய் உற்று நோக்கினர் தாநென்ன லொற்றிய
 கொற்ற மீனக் குறிபிழை யாமைகண்
 டெற்றி தாங்கொலென் றேந்தன்மு னெய்தினார்.
 |  
      (பா 
        - ம்.) * காப்புச் செய்த.   |