|  குவித்து - சிவந்த 
        கைகளைக் கூப்பி, தம் கோன் குறை இரப்பார் - தம் தலைவன் பொருட்டுக் குறையிரந்து வேண்டிக் கொள்வாராகி, ஐய - ஐயனே,
 அவித்த பொறியாய் - ஐம்பொறிகளைக் கெடுத்தவனே, எம் அரசும் - எம்
 அரசனும், கால் தள்ளும் செவி - காற்றை வீசும் காதுகளையும், தறு கண் -
 அஞ்சாமையையுமுடைய, வேழமும் - வெள்ளையானையும், தீங்கு உடையர்
 அன்றோ - குற்ற முடையவர்கள் அல்லவா எ - று.
       சவித்த, 
        சபித்தவென்பது திரிந்து நின்றது. தங்கோனுககென்க. குறையிரத்தல் : ஒருசொல். இரப்பார் : எச்சம்; பெயருமாம். அவித்தல் -
 அடக்குதல். பொறி அவித்தாய் என விகுதி பிரிந்து சென்றியையும்.
 பொறிகளை யவித்தவனென முனிவன்பால் தீங்கின்மை கூறிற்று.
 வெகுண்டாரது பொறுதி வேண்டுவார் தம் கற்றத்தை யுடன்படல்
 வேண்டுமாகலின் தீங்குடைய ரன்றோ என்றார். திணை விரவிச் சிறப்பால்
 உயர்திணை முடிபேற்றன. (16)
 
	
	| அத்தகைய நீராற் சபித்தீ ரடிகேண்மற் றித்தகைய சாப மினிவிடுமி னென்றிரந்து
 கைத்தலங்கள் கூப்பிக் கரைந்தார்க் கிரங்கியருள்
 வைத்த முனிபிறிது சாபம் வகுக்கின்றான்.
 |       (இ 
        - ள்.) அத்தகைய நீரால் சபித்தீர் - அங்ஙனமாய குற்றத்தால் சாபமிட்டீர், அடிகேள் - அடிகளே, மற்று - யாங்கள் வேண்டியக்
 கோடலினால், இத்தகைய சாபம் - இந்தச் சாபத்தை, இனிவிடுமின் என்று
 இரந்து - இப்பொழுதே நீக்கியருள வேண்டுமென்று குறையிரந்து,
 கைத்தலங்கள் கூப்பிக் கரைந்தார்க்கு - கைகளைக் குவித்து முறையிட்ட
 தேவர்களின் பொருட்டு, இரங்கி அருள் வைத்த முன - மனம் இரங்கிக்
 கருணை கூர்ந்த முனிவன், பிறிது சாபம் வகுக்கின்றான் - வேறு
 சாபமிடுகின்றான் எ - று
 .      நீர் 
        - தடனமை; ஈண்டுக் குற்றமாந்தன்மை. மற்று : வினைமுற்று; உயர்த்துக் கூறுதற்குட்ச சபித்தீர் அடிகேள் விடுமின் எனப் பன்மையாற்
 கூறினார். கரைதல் - சொல்லுதல்; முறையிடுதல். பிறிதாகிய சாபமென்க. (17)
 
        
          | [அறுசீரடியாசிரிய 
              விருத்தம்]  |   
          | சிந்தனை 
            வாக்கிற் கெட்டாச் சிவனரு ளளித்த சேட நிந்தனை பரிகா ரத்தா னீங்காது தலைமட் மாக
 வந்தது முடிமட் டாக மத்தைா வனமா வாகி
 ஐந்திரு பஃதாண் டெல்லை யகன்றபின் பண்டைத் தாக.
 |       (இ 
        - ள்.) சிந்தனை வாக்கிற்கு எட்டாச் சிவன் - மனத்திற்கும வாக்கிற்கும் எட்டாத சிவபெருமான், அருள் அளித்த சேட நிந்தனை -
 திருவருளா லருளிய சேடத்தை நிந்தித்த குற்றம், பரிகாரத்தால் நீங்காது -
 கழுவாயினால் அகலாது (ஆதலால்), தலைமட்டாக வந்தது - தலை யளவாக
 வந்தது, முடிமட்டு ஆக - முடியளவாகக் கடவது; மத்தம்மா -
 மதமயக்கத்தையுடைய வெள்ளையானை, வனம்மா ஆகி - காட்டானை  யாகி,
 |