| 
	
	| நான மென்பனி நறும்புன னாயகன் பூசைக் கான நல்விரை வருக்கமு மமரர்கைக் கொடுத்து
 ஞான வெண்மதிச் சடையவன் கோயிலின் ஞாங்கர்த்
 தான மர்ந்தருச் சனைசெய்வான் றங்கணா யகனை.
 |        (இ 
        - ள்.) மெல் நானம் - மெல்லிய கத்தூரியையும், நறும் பனி புனல் - மணமுடைய பனிநீரையும், நாயகன் பூசைக்கு ஆன நல் விரை வருக்கமும்
 - இறைவன் பூசைக்குரிய நல்ல கந்தவருக்கங்களையும், அமரர் கைக்
 கொடுத்து - தேவர்கள் கையில் கொடுத்து, ஞானம் - ஞான வடிவாகிய,
 வெண்மதிச் சடையவன் கோயிலின் ஞாங்கா - வெள்ளிய சந்திரனை யணிந்த
 சடையினையுடைய சோமசுந்தரக் கடவுளின் விமானத்தின் திருமுன், தான்
 அமர்ந்து - தானிருந்து, தங்கள் நாயகளை அருச்சனை செய்வான் - தங்கள்
 இறைவனை அருச்சனை புவிப்பானாயினன் எ - று.
       நானம், 
        புனல் என்பவற்றில் எண்ணும்மை விரிக்க. பனிநீர் பன்னீர் என இக் காலத்து வழங்கும். ஞாங்கர் - முன் செய்வித்தலைச் செய்தலாகக்
 கூறினார்; இங்ஙனம் வழங்குமாறுங் காண்க. அவன் குடி முழுதையும்
 உளப்படுத்தித் தங்கணாயக னென்றார். (10)
 
	
	| றன்னைமெய் யன்பினா லருச்சிசெய் வானோர் உள்ள வல்வினை யீட்டமுங் கங்குலு மொதுங்கக்
 கள்ள மில்லவன் யாரையுங் கண்டிலன் கண்டான்
 தள்ள ருஞ்சுடர் விமானமேற் றனித்துறை தனியை.
 |       (இ 
        - ள்.) வள்ளல் தன்னை - சோமசுந்தரக் கடவுளை, மெய் அன்பினால் - உண்மை யன்பினால், அருச்சிசெய் வானோர் (ஈட்டமும்) -
 அருச்சித்த தேவர்களின் கூட்டமும், உள்ள வல்வினை ஈட்டமும் - தன்
 மனத்தைப் பற்றிய வலிய வினைக் கூட்டமும், கங்குலும் ஒதுங்க - இரவும்
 நீங்க, கள்ளம் இல்லவன் - வஞ்சனையில்லாதவனாகிய வணிகன், யாரையும்
 கண்டிலன் - ஒருவரையுங் காணாதவனாகி, தள் அரும் சுடர் விமானம்
 மேல் -நீங்காத ஒளியையுடைய விமானத்தின்கண், தனித்து உறைதனியைக்
 கண்டான் - தனித்து எழுந்தருளியிருக்கும் சொக்க லிங்கப் பெருமானையே
 கண்டான் எ - று.
       அருச்சி, 
        முதனிலைத் தொழிற் பெயர். ஈட்டமும் என்பது வானோர் என்பதனோடுங் கூட்டப்பட்டது; ஓர் என்பதனை அசையாக்கிச் செய்வானது
 வினை யீட்டமும் எனலுமாம்; அனாதியேயுள்ள வல்வினை
 என்றுரைத்தலுமாம். கண்டிலன் : முற்றெச்சம். (11)
 
	
	| ஆழ்ந்த சிந்தைய னதிசய மடைந்துசே வடிக்கீழ்த் தாழ்ந்தெ ழுந்திரு கைகளுந் தலைமிசைப் கூப்பிச்
 சூழ்ந்து தன்பதிக் கேகுவா னொருதலை துணிந்து
 வாழ்ந்த வன்பினான் விடைகொடு வழிக்கொடு வந்தான்.
 |       (இ 
        - ள்.) ஆழ்ந்த சிந்தையன் - (அன்பில்) அழுந்திய சிந்தையை யுடைய வணிகன், அதிசயம் அடைந்து - வியப்புற்று, சேவடிக்கீழ்
 |