|       (இ 
        - ள்.) நீ நாளும் பூசித்து - நீ தினந்தோறும் வழிபட்டு, அதில் வேண்டிய கொண்டு - அக் கோட்டையில் வேண்டுமளவு பெற்றுக் கொண்டு,
 நித்தம் ஆனாத அன்பர்க்கு அமுது ஊட்டி - நாடோறும் நீங்காத நமது
 அடியார்கட்கு உணவு அருத்தி, எவர்க்கும் - யாவருக்கும் அன்னதான ஆதி
 -அன்னதானம் முதலிய, நானா தருமங்களும் செய்தி - பலவேறு வகையான
 அறங்களையுஞ் செய்யயக்கடவை; வீடு மேல் நாள் அளிக்கின்றனம் என்று
 - முடிவில் வீடு பேறு அளிக்கின்றோமென்று, விசும்பில் கூற - வானின்கண்
 அசரீரியாகக் கூறியருள.
       வேண்டிய 
        : வினையாலணையும் பெயர். ஆனாத அன்பர் - குறையாத அன்பினையுடையர் என்றுமாம். தானாதி : நெடிற்சந்தி. நானா - பல. (14)
 
	
	| கேட்டின்ப மெய்திக் கிளர்விம்மித னாகி வேதப் பாட்டின் பயனைப் பணிந்தில்ல மடைந்து பண்டை
 ஈட்டுந் தவப்பே றெனக்கண்டனன் றொண்டர்க் கெந்தை
 கூட்டுங் கதிபோ லுலவாமற் கொடுத்த கோட்டை.
 |       (இ 
        - ள்.) கேட்டு இன்பம் எய்தி - (அதனைக்) கேட்டு மகிழ்ச்சியடைந்து, கிளர் விம்மிதனாகி - மேலெழுந்த விம்மிதத்தையுடைய
 வனாய், வேதப் பாட்டின் பயனைப் பணிந்து - வேதப் பனுவலின்
 பொருளாயுள்ள இறைவனைப் பணிந்து, இல்லம் அடைந்து - மனையையெய்தி,
 பண்டை ஈட்டும் தவப்பேறு என - முற்பிறப்புக்களிலே தேடிய தவத்தின்
 பயனைக் கண்டாற்போல, தொண்டர்க்கு - அடியார்கட்கு, எந்தை - எம்
 பெருமான், கூட்டும் கதிபோல் - அடைவிக்கும் பேரின்பம் (என்றுங்
 குறையாதிருத்தல்) போல, உலவாமல் கொடுத்த கோட்டை - குறையாதிருக்கக்
 கொடுத்தருளிய கோட்டையை, கண்டான் - கண்டனன்.
       விம்மிதம் 
        - அதிசயம். கோட்டையைத் தவப்பேறெனக் கண்டனன் என முடிக்க. கோட்டையை என்னும் இரண்டனுருபு இறுதிக்கண் தொக்கது;
 
        
          | "ஐயுங் கண்ணு 
            மல்லாப் பொருள்வயின் மெய்யுருபு தொகாஅ விறுதி யான"
 |  என்பது தொல்காப்பியம். 
        (15)  
	
	| வானாறு சூடி தருகோட்டையை வைக றோறும் பூநாறு சாந்தம் புகையொண்சுடர் கொண்ட ருச்சித்
 தானாத செவ்வி யடிசிற்கு மதற்கு வேண்டும்
 நானா கருவி விலைக்கும்மது நல்க வாங்கா.
 |       (இ 
        - ள்.) வான் ஆறு சூடி - கங்கையைத் தரித்த சோம சுந்தரக் கடவுள், தரு கோட்டையை - அருளிய கோட்டையை, வைகல் தோறும் -
 |