இயமான னிந்திரவி யெரிவா னிலஞ்சலில
மெறிகா லெனும்பகுதி யிருநான்
மயமான சுந்தரனை மனம்வாய்மெய் யன்பினிறை
வழிபா டடைந்தவர குணனாய்ச்
சயவேளை வென்றவடி வினனீரில் வென்றிபெறு
சதவேள்வி யிந்திரனை நிகர்வோன்
இயன்மேனி கொண்டவொளி யினிலேழ் பசும்புரவி
யினன்றேசு* வென்றவர குணனே. |
(இ
- ள்.) இயமானன் இந்து இரவி - ஆன்மாவும் திங்களும்
ஞாயிறும், எரிவான் நிலம் சலிலம் எறி கால் எனும் - நெருப்பும் வானும்
நிலமும் நீரும் வீசுகின்ற காற்றுமாகிய, இரு நால் பகுதி மயமான சுந்தரனை
- எண் பகுதியின் மயமாகிய சோமசுந்தரக் கடவுளை, மனம் வாய் மெய்
அன்பில் நிறை வழிபாடு அடைந்த வரகுணனாய் - மனம் மொழி
மெய்யென்னும் மூன்று கரணங்களினாலும் மெய்யன்பு நிறைந்த
வழிபாட்டினைப் பொருந்திய சிறந்த குணத்தையுடையவனாய், இயல் மேனி
கொண்ட ஒளியினில் - இலக்கணமமைந்த வடிவத்திலுள்ள ஒளியினால், ஏழ்
பசும் புரவி இனன் தேசு வென்ற வரகுணன் - ஏழு பச்சைக்
குதிரைகளையுடைய சூரியன் ஒளியையும் வென்ற வரகுண பாண்டியன்
என்பான், சயவேளை வென்ற வடிவினன் - (அழகினால்) வெற்றியையுடைய
மதவேளையும் வென்ற வடிவத்தையுடையவன்; ஈறு இல் வென்றி பெறு
சதவேள்வி இந்திரனை நிகர்வோன் - (வேள்வி யியற்றுதலால்) அழிவில்லாத
வெற்றி பொருந்திய நூறு வேள்வியினையுடைய இந்திரனையொப்போன்.
இயமானன்
- எஜமானன் என்பதன் றிரிபு. எஜமானன் -
வேள்வியியற்றிய ஆன்மா. இருநாற் பகுதி மயமான என மாறுக. அட்ட
மூர்த்தத்தை,
| "இருநிலனாய்த்
தீயாகி நீரு மாகி இயமான னாயெறியுங் காற்று மாகி அருநிலைய திங்களாய் ஞாயி
றாகி ஆகாச மாயட்ட மூர்த்தி யாகி" |
என்று தாண்டக வேந்தர்
அருளிச் செய்தலுங் காண்க. வரகுணன் -
மேலாகிய குணமுடையவன். வழிபாடடைந்த வரகுணனாய் என்றமையால்
அவன் பெயர் அக்காரணத்தாலெய்தியதென்பது குறிப்பித்தவாறாயிற்று.
வேள்வியால் இந்திரனை நிகர்வோன் என ஏது வருவிக்க. இனன் -
சூரியன். (2)
மறையாதி கலைபலவு மகமாதி பலவினையும்
வழுவாது நிறுவுதலின் மலர்மேல்
இறையாகி மலர்வனிதை பிரிவான+திருமகளி
ரிகபோகம் விளையமுறை செயலாற் |
(பா
- ம்.) * இனதேசு. +பிறிவான.
|