|  செய்தனை என - நீ 
        என்ன செய்தாய் என்று வினவ, இசைப் பெருமான் - இசைத் தலைவனாகிய பத்திரன், தென்னர் கோன் அடிதொழுது -
 பாண்டியர் மன்னனாகிய வரகுணனின் அடிகளை வணங்கி, தன் செய்தியை
 மொழிவான் - தனது செய்தியைக் கூறுவானாயினன்.
       இங்கினும் 
        - இவ்விடத்தினின்றும்; இன : நீக்கப்பொருட்டு. (62)  
	
	| நென்னல் வாயடி யேனின தாணிழ னீங்கிப் பின்னல் வார்சடை மௌலியெம் பிரானடி பணிந்தேன்
 இன்ன லார்குறை யிரந்துமீண் டிருக்கைபுக் கிருந்தேன்
 கன்ன லார்மொழி பங்கரென் கனாவில்வந் தருளி.
 |       (இ 
        - ள்.) நென்னல் வாய் - நேற்றைப் பொழுதில், அடியேன் நினதாள் நிழல் நீங்கி - அடியேன் உன்னுடைய அடி நிழலை நீங்கிச்
 சென்று, பின்னல் வார் சடை மௌலி - பின்னிய நீண்ட சடையாகிய
 முடியினையுடைய, எம்பிரான் அடி பணிந்தேன் - எம் பிரானாகிய சோம
 சுந்தரக் கடவுளின் திருவடிகளைப் பணிந்து, இன்னல் ஆர் குறை இரந்து
 மீண்டு - துன்ப மிக்க குறைபாடுகளை இரந்து கூறி மீண்டு, இருக்கை புக்கு
 இருந்தேன் - இல்லிற் புகுந்து இருந்தேன்; கன்னல் ஆர்மொழி பங்கர் -
 கரும்பு போலும் மொழியினையுடைய உமையைப் பாகத்திலுடைய
 அவ்விறைவர், என் கனாவில் வந்தருளி - எனது கனவின்கண் வந்தருளி.
 வாய் : ஏழனுருபு. நின : அகரம் ஆறன் பன்மையுருபு. பணிந்தேன் :
 முற்றெச்சம். ஆர் : உவமச் சொல்லாக நின்றது. மொழி : ஆகு பெயர்.
 (63)
 
	
	| ஓடி யுன்பொருட் டாகநாம் விறகெடுத் துழன்று வாடி நின்பகைப் புறங்கடை வந்துசா தாரி
 பாடி வென்றுநின் பகைவனைத் துரந்தன மெனச் சொல்
 ஆடி னார்விழித் தேனிது நிகழ்ந்ததென் றறைந்தான்.
 |       (இ 
        - ள்.) உன் பொருட்டாக - உன் நிமித்தமாக, நாம் ஓடி விறகு எடுத்து உழன்று வாடி - நாம் ஓடி விறகு சுமந்து திரிந்து வாடி, நின்
 பகைப் புறங்கடை வந்து - நின் பகைவனாகிய ஏமநாதன் தலைவாயிலிற்
 சென்று, சாதாரி பாடி வென்று - சாதாரிப் பண்ணைப் பாடி வென்று, நின்
 பகைவனைத் துரந்தனம் எனச் சொல் ஆடினார் - அவனை ஓட்டி
 விட்டேமெனக் கூறியருளினார்; விழித்தேன் - யானுங் கண் விழித்தேன்;
 இது நிகழ்ந்தது என்று அறைந்தான் - இது தான் நடந்த செய்தி என்று
 கூறினான்.
       பகைப் 
        புறங்கடை - பகைவனது இல்லின் புறங்கடை. சொல்லாடினார் - சொல்லினார். சொல்லியவளவில் விழித்தேன் என்க. (64)
 |