|       (இ 
        - ள்.) அலை கடல் நெடுந்துகில் - அலைக்கின்ற நெடிய கடலினை ஆடையாகவுடைய, அந்த நாடு எனும் தலைமகள் தனக்கு - அந்த
 நாடு என்கின்ற தலைவிக்கு, வான் தடவு குன்று - விண்ணினை அளாவிள
 மலைகள், பூண்முலை என விளங்கின - அணிகளையுடைய கொங்கைகள்
 போல விளங்கின; திருவஞ்சைக்களம் - திருவஞ்சைக்களம் என்னும் பதி,
 முகத்தில் தீட்டிய திலகமே ஆனது - அம்மாதின் முகத்தில் இட்ட திலகமே
 போன்று விளங்கியது.
       பூண்முலையும் 
        திலகமும் மகளிர்க்கு இன்றியமையாச் சிறப்பினவாதல் உணர்க. (13)
 
        
	| அறமக ளாக்கமு மலரின் மேயசெந் நிறமக ளாக்கமு நீதி சான்றபோர்
 மறமக ளாக்கமும் வடசொற் றென்கலைத்
 திறமக ளாக்கமுஞ் சிறந்த தந்நகர்*.
 |        (இ 
        - ள்.) அறமகளாக்கமும் - அறமகளாலாய தருமச்செல்வமும், அலரில்மேய செந்நிறமகள் ஆக்கமும் - தாமரை மலரில் வசிக்குந் திரு
 மகளாலாய பொருட் செல்வமும், நீதிசான்ற போர் மறமகள் ஆக்கமும் -
 நீதியமைந்த போருக்குரிய கொற்றவையாலாய வீரச்செல்வமும். வட சொல்
 தென்கலைத் திறமகள் ஆக்கமும் - வடமொழி தென்மொழி யென்னும்
 பகுப்பினையுடைய கலைமகளாலாய கல்விச் செல்வமும், சிறந்தது அந்நகர் -
 சிறக்கப்பெற்றது அந்நகரம்.
       அறமகள் 
        - தருமதேவதை. செந்நிறமகள் - செய்யாள்; இலக்குமி. நீதியுடன் கூடாத போர் வென்றி வீரமாகாதென்பார் நீதிசான்ற போர்
 என்றார். ஆக்கம் - ஆகியது. (14)
 
        
	| மண்புக ழந்நகர் மறுகின் மாடொரு தண்புனற் சாலையிற் சார்ந்து ளானிப்பால்
 விண்புகழ் நீதியவ் வேந்தற் கன்றிராக்
 கண்புனை நுதலினார் கனவிற் றோன்றினார்.
 |       (இ 
        - ள்.) மண்புகழ் அந்நகர் மறுகின் மாடு - புவி முழுதும் புகழும் அந்த நகரின் வீதியின்கண், ஒரு தண்புனல் சாலையில் சார்ந்துளான் - ஒரு
 தண்ணீர்ப் பந்தரிற் றங்கினன்; இப்பால் - இப்புறம், விண் புகழ் நீதி
 அவ்வேந்தற்கு - வானுலகும் புகழும் நீதியினையுடைய அச் சேர வேந்தற்கு,
 அன்று இரா - அன்று இரவில், கண்புனை நுதலினார் கனவில் தோன்றினார்
 - கண் பொருந்திய நெற்றியையுடைய இறைவர் கனவிலே தோன்றியருளினார்.
       மலைநாடு 
        நண்ணினபத்திரன் அஞ்சைக்களத்து மறுகிலே தண்ணீர்ப் பந்தலிற் சார்ந்திருந்தனன் என்க. மண், விண் என்பன ஆகுபெயர்கள். (15)
 
      (பா 
        - ம்.) * சிறந்தவந்நகர்.   |