|  நாணி விழித்து ஆவி 
        பிழைத்தேன் போலும் - வெள்கி விழித்து உயிர் பிழைத்தேன் போலும்.
       கனவின் 
        கண், பலிக்குவந்த இறைவர்மேற் காதலுற்றாளொருத்தி அதனைத் தன் தோழிக்குக் கூறுவது பொருளாகக் கொண்ட இது முதலிய
 மூன்றும் பாணனார் பாடிய இசைப்பாட்டாக ஆசிரியர் இயற்றியன வெனக.
 கையறவு - துன்பம்; காம நோய். போலும் என்பன ஒப்பில் போலி. (10)
 
         
          | ஒண்ணுதலாய் 
            வெண்டலைகொண்டு டுண்பலிக்கு நம்மனையி                                       னூடே 
            கூடற் கண்ணுதலா ருள்ளாளக் கானமிசைத் தென்னுள்ளங் கவர்ந்தார்                                       போலுங்
 கண்ணுதலார் பாடு மவிநயங்கண் டாகங் கலப்பேன் பாதி
 பெண்ணுருவ மாயிருந்தார் வெள்கிவிழித் தாவி பெற்றேன்                                       போலும்
 |  .      (இ 
        - ள்.) ஒள்நுதலாய் - ஒள்ளிய நெற்றியினையுடைய தோழியே வெண்தலை கொண்டு - வெள்ளிய தலையோட்டினை ஏந்தி, உண்பலிக்கு -
 உண்ணும் பலியின் பொருட்டு, நம்மனையின் ஊடே - நமது இல்லின் கண்
 (வந்து), கூடல் கண்ணுதலார் - கூடலில் எழுந்தருளிய நெற்றிக்
 கண்ணையுடைய இறைவர், உள்ளாளக் கானம் இசைத்து - உள்ளாள இசை
 பாடி, என் உள்ளம் கவர்ந்தார் போலும் - எனது சிந்தையைக் கொள்ளை
 கொண்டார் போலும், கண்ணுதலார் பாடும் அவிநயம் கண்டு - அவர் பாடும்
 இன்பச் சுவையவிநயத்தைக் கண்டு, ஆகம் கலப்பேன் - அவரது திருமார்பிற்
 கலக்கத் தொடங்கினேன்; பாதி பெண் உருவமாய் இருந்தார் - ஒரு கூறு
 பெண் வடிவமாயிருந்தனர்; வெள்கி விழித்து ஆவி பெற்றேன் போலும் -
 (அதனால்) நாணி (அக்கலவி ஒழிந்து) விழித்து நீங்கி உயிர் பெற்றேன்
 போலும்.
       உள்ளாளம் 
        இன்னதென்பது முன் கூறப்பட்டது. அவிநயம் - காம அவிநயம்; இதன் இயல்பினை,
 
        
	      | "காம 
            வவிநயம் கருதுங் காலைத் தூவுள் ளுறுத்த வடிவுந் தொழிலும்
 காரிகை கலந்த கடைக்கணுங் கவின்பெறு
 மூரன் முறுவல் சிறுநிலா வரும்பலும்
 மலர்ந்த முகனும் இரந்தமன் கிளவிம்
 கலந்தன பிறவுங் கடைப்பிடித் தனரே"
 |  என்பதனால் அறிக.	
        (11)  
	
	      | ஐயரியுண் 
            கண்ணாய் திருவால வாயுடையா ரையங்                                       கொள்வான் மையனகை செய்தென் வனமுலையின் மேற்செங்கை                                 வைத்தார் 
            போலும்
 மையனகை செய்தென் வனமுலைமேற் கைவைப்ப மாழ்கிச்                                       சோர்வேன்
 தையலிடங் கண்டு நடுநடுங்கி விழித்தாவி தரித்தேன்                                       போலும்.
 |       (இ 
        - ள்.) ஐ அரி உண் கண்ணாய் - அழகிய செவ்வரி படர்ந்த மையுண்ட கண்களை உடைய தோழியே, திருவாலவாய் உடையார் -
 |