| 
	
	| மற்றை வைகலவ் விருவரைப் பஞ்சவன் மதுரைக் கொற்ற வன்றன தவையிடை யழைத்துநேர் கூட்டிக்
 கற்ற வேழிசை கேட்குமுன் கலத்தினும் போந்த
 வெற்றி வேன்மதர் நெடுங்கணாள் விறலியை வைதாள்.
 |        (இ 
        - ள்.) மற்றைவைகல் - மறுநாளில், அவ்விருவரை - அவ்விருவரையும், பஞ்சவன் மதுரைக் கொற்றவன் - பாண்டியனாகிய
 மதுரை மன்னன், தனது அவையிடை அழைத்து - தன் அவையின்கண்
 வருவித்து, நேர்கூட்டி - ஒருவருக்கொருவர் நேரில் இருக்குமாறு செய்து,
 கற்ற ஏழ் இசை கேட்குமுன் - அவர்கள் கற்ற ஏழு இசைகளையும் பாடுமாறு
 ஏவிக் கேட்டற்கு முன்னரே, கலத்தினும் போந்த - மரக் கலத்தினின்றும்
 வந்த, வெற்றிவேல் மதர் நெடுங்கணாள் - வெற்றி பொருந்திய வேல்போன்ற
 மதர்த்த நீண்ட கண்களையுடையவள், விறலியை வைதாள் - பாணபத்திரன்
 மனைவியாகிய பாடினியை இகழ்ந்துரைத்தாள்.
       இருவரையும் 
        என்னும் முற்றும்மை விகாரத்தாற் றொக்கது கலம் - நாவாய். கலத்தினால் வந்தவளைக் கலத்தினின்றும் வந்தவள் என்றார். (10)
 
	
	| குற்ற மெத்தனை யெத்தனை குணங்கள் யாழ்க் கோலுக் குற்ற தெய்வம்யா* விசைப்பதெவ் வுயிருடம் புயிர்மெய்
 பெற்ற வோசையெவ் வளவவைக் குத்தரம் பேசி
 மற்றெ னோடுபா டில்லையேல் வசையுனக் கென்றாள்.
 |       (இ 
        - ள்.) யாழ்க்கோலுக்கு - வீணைக்கு, எத்தனை குற்றம் - எவ்வளவு குற்றங்கள்; எத்தனை குணங்கள் - எவ்வளவு குணங்கள்;
 உற்ற தெய்வம் யா - பொருந்திய தெய்வங்கள் யாவை; இசைப்பது எவ்வுயிர்
 உடம்பு உயிர்மெய் - ஒலிப்பது எந்த உயிரெழுத்து எந்த மெய்யெகுத்து எந்த
 உயிர்மெய்யெகுத்து; பெற்ற ஓசை எவ்வளவு - (அவைகட்கு) அமைந்த ஒலி
 எவ்வளவின; அவைக்கு உத்தரம் பேசி - அவைகட்கு விடைகூறி, மற்று
 எனோடு பாடு - பின் என்னுடன் பாடு வாயாக; இல்லையேல் உனக்கு வசை
 என்றாள் - இன்றேல் உனக்கு அது குற்றமாகும் என்று கூறினாள்.
       குற்றம் 
        - செம்பகை, ஆர்ப்பு, கூடம், அதிர்வு என்பன; இவை மரக்குற்றத்தால் வருவன என்பதை,
 
	
	| "நீரிலே நிற்றல் அழுகுதல் வேதல் நில மயங்கும் பாரிலே நிற்றல் இடிவீழ்தல் நோய்மரப் பாற்படல் கோள்
 நேரிலே செம்பகை ஆர்ப்பொடு கூடம் அதிர்வு நிற்றல்
 சேரில்நேர் பண்கள் நிறமயக் கம்படும் சிற்றிடையே"
 |  
      (பா 
        - ம்.) * தெய்வ மேது.   |