ஆயபோ தாழி யங்கை யண்ணல்பொற் கரக நீராற் 
		சேயவான் சோதி யாடற் சேவடி விளக்கிச் சாந்தந் 
		தூயபோ தவிழச் சாத்தித் தூபமுஞ் சுடருங் கோட்டி 
		நேயமோ டருச்சித் தைய னிறையருள் பெற்று நின்றான்.  | 
	 
	 
	        (இ 
        - ள்.) ஆயபோது - அப்பொபது, ஆழி அம் கை அண்ணல் -  
        திகிரிப் படையை அழகிய கையிற் கொண்ட திருமால், பொன் கரக நீரால் -  
        பொன்னாலாகிய கரகத்திலுள்ள நீரினால், சேய வான் சோதி - சிவந்த சிறந்த  
        ஒளிப் பிழம்பாகிய இறைவனது, ஆடல் சேவடி விளக்கி - திருக்கூத்தாடும்  
        சிவந்த திருவடிகளை விளக்கி, சாந்தம் தூய போது அவிழச்சாத்தி -  
        சந்தனத்தையும் புனிதமான மலர்களையும் மணம் வீசச் சாத்தி, தூபமும்  
        சுடரும் கோட்டி - தூப தீபங்களை (விதிமுறையாய்) சுழற்றி, நேயமோடு  
        அருச்சித்து - அன்போடு அருச்சனை செய்து, ஐயன் நிறை அருள் பெற்று  
        நின்றான் - இறைவனுடைய நிறைந்த அருளைப் பெற்று நின்றான் எ - று. 
            அங்கை 
        - அகங்கையுமாம். சேய - செம்மையாகிய; விகாரமில்லாத  
        என்றுரைத்தலுமாம். அவிழ - விரிய; மணமென்பது வருவிக்க. கோட்டி -  
        வளைத்து; சுழற்றியென்றபடி. (176)  
      
	
	விண்டலத் தவரு ளாதி வேதியன் பாத தீர்த்தம் 
		முண்டகத் தவனு மாலு முனிவரும் புரிந்த ராதி 
		அண்டரு நந்தி தேவு மடுகணத் தவரு மேனைத் 
		தொண்டரும் புறம்பு முள்ளு நனைத்தனர் சுத்தி செய்தார்.  | 
	 
	 
		
	
		
       
           (இ 
        - ள்.) விண் தலத்தவருள் ஆதி வேதியன் - தேவர்களில்  
        முதன்மை பெற்ற அந்தணனாகிய இறைவனது, பாத தீர்த்தம் - திருவடித்  
        தீர்த்தத்தால், முண்டகத்தவனும் மாலும் - தாமரை மலரில் வசிக்கும் பிரமனும்  
        திருமாலும் முனிவரும் - முனிவர்களும், புரந்தர ஆதி அண்டரும் - இந்திரன்  
        முதலான தேவர்களும், நந்தி தேவும் - திருநந்தி தேவரும், அடு கணத்தவரும் - அவரை அடுத்த 
        சிவகணங்களும், ஏனைத் தொண்டரும் - மற்றை  
        அடியார்களும், புறம்பும் உள்ளும் நனைத்தனர் சுத்தி செய்தார் - தங்கள்  
        புறத்தையும் அகத்தையும் நனைத்துத் தூய்மையாக்கினார்கள் எ - று. 
            சிவபெருமானைத் 
        தேவர்களுள் அந்தணனென்று மெய்ந் நூல்கள் கூறும். அடு கணம் : அடுத்த கணம் என வினைத்தொகை; 
        இங்ஙனம் அருகியன்றி  
        வாராது. தலையிற்றெளித்து உள்ளும் பருகினாரென்பார் 'புறம்பும் உள்ளும்  
        நனைத்தனர்' என்றார். நனைத்தனர் : முற்றெச்சம். (177)  
      
      
         
          அத்தலை நின்ற 
            மாயோ* னாதிசெங் கரத்து நங்கை 
            கைத்தலங் கமலப் போது பூத்ததோர் காந்த ளொப்ப 
            வைத்தரு மனுவா யோதக் கரகநீர் மாரி பெய்தான் 
            தொத்தலர் கண்ணி விண்ணோர் தொழுதுபூ மாரி பெய்தார்.  | 
         
       
      
       
           (பா 
      - ம்.) * அனாதி.  
   |