|  
             (இ 
        - ள்.) புத்தனார் எறிந்த கல்லும் - சாக்கிய நாயனார் எறிந்த 
        கல்லையும், போது என மிலைந்த வேத வித்தனார் - மலரைப் போலச்  
        சூடியருளிய வேத காரணராகிய இறைவனது, அடிக்கீழ் வீழ - திருவடியின்  
        கீழ் வீழுமாறு, விண்ணவர் முனிவர் ஏனோர் - தேவர்களும் முனிவர்களும்  
        மற்றையரும், சுத்தநா ஆசி கூறி - புனித நாவினால் ஆக்க மொழி கூறி.  
        குங்குமத் தோயம் தோய்ந்த - குங்கும நீரில் நனைந்த, முத்தவால் அரிசி  
        வீசி - முத்துப் போன்ற வெள்ளிய அரிசியை வீசி, போக வெள்ளம்  
        மூழ்கினார் - இன்ப வெள்ளத்தில் அழுந்தினார்கள் எ - று. 
            புத்தனார் 
        - சாக்கிய நாயனார்; பெரிய புராணத்திற் 
        கூறப்பட்ட தனி  
        யடியார்களில் ஒருவர்; இவர் ஒரு கால் சிவலிங்கப் பெருமானைக் கண்டு  
        அன்பு மீக் கூர்ந்து பதைத்துக் கல்லெறிந்தவர், அது திருவருட் குறிப்பால்  
        நிகழ்ந்ததெனக் கொண்டு பின்பு நாடொறும் மறவாதுகல் லெறிதலாகிய  
        திருத்தொண்டினைச் செய்து முத்தி பெற்றார்; இதனை 
      
        
          "வார்கொண்ட 
            வனமுலையா ளுமைபங்கன் கழலே 
            மறவாது கல்லெறிந்த சாக்கியற்கு மடியேன்"  | 
         
       
      என்னும் திருத்தொண்டத் 
        தொகையா லறிக. இவர் தாம் முன்பிருந்த புத்த  
        சமயக் கோலத்தோடிருந்தே வழிபட்டமையின் சாக்கியரெனப்பட்டார்.  
        சாக்கியர் என்பது பௌத்தருக்கொரு பெயர். வேதவித்து -  
        வேதங்களையறிந்தவனுமாம். அடிக்கீழ் வீழ அரிசி வீசியென்க. (180)  
      
	
	| அம்மையோ டப்ப னென்ன வலர்மணம் போல நீங்கார்
		தம்மருள் விளையாட் டாலே யாற்றநாட் டமியர் போல
		நம்மனோர் காணத் தோன்றி நன்மணம் புணர ஞாலம்
		மும்மையு முய்ந்த வென்னாத் தத்தமின் மொழிய லுற்றார்.  | 
	 
	 
		
	
		
       
           (இ 
        - ள்.) அம்மையோடு அப்பன் என்ன - அம்மையும்  
        அப்பனுமென்று, அலர்மணம் போல நீங்கார் - பூவும் மணமும் போலப்  
        பிரியாதவராகிய பெருமானும் பிராட்டியும், தம் அருள் விளையாட்டாலே -  
        தமது அருள் விளையாடலினால், ஆற்ற நாள் தமியர் போல நம்மனோர்  
        காணத் தோன்றி - மிகவும் பலவாகிய நாள் பிரித்தவர் போல நம் போன்றார்  
        காணுமாறு தோன்றி, நல் மணம் புணர - நல்ல திருமணஞ் செய்தருள,  
        ஞாலம் மும்மையும் உய்ந்த என்னா - மூன்று உலகங்களும் ஈடேறின என்று,  
        தத்தமில் மொழியல் உற்றார் - யாவரும் தங்கள் தங்களுக்குள் கூறி  
        மகிழ்ந்தனர் எ - று. 
           என்ன 
        - என்று, இதனாலும் தாதான்மியத்தான் இருதிறப்பட்டியைந்து  
        நிற்குந் தன்மை கூறினார். இங்ஙனம் பிரிப்பின்றியிருந்து அம்மையும்  
        அப்பனும் எனப்படுதலை, 
      
        
          | "அம்மையப்ப 
            ரேயுலகுக் கம்மையப்ப ரென்றறிக"  | 
         
       
      என்னும் திருக்களிற்றுப்படியாரா 
        லறிக. ஆற்ற : மிகவெனப் பொருள்படும்  
        உரிச்சொல்; செய வெனச்சமாகும்;  
      
        
          | "ஆற்றவும் பழையதுன் 
            னங்கை வச்சிரம்"  | 
         
       
      என இந்நூலுள்ளும்,  
       
       |