| 
	
	| எடுத்தருளுஞ் சேவடிக்கீ ழென்றுமிருக் கின்றாரை அடுத்தபெருஞ் சீர்பரவ லாரளவா யினதம்மாழு
 |  என்னும் திருத்தொண்டர் 
        புராணச் செய்யுட்களா னறிக. கற்புடை யொருத்தி நோற்கும் பிலம் - உமாதேவியார் திருக்கைலையினின்றும்
 எழுந்தருளி வந்து இறைவனைப் பூசித்து எண்ணான்கு அறங்களும் செய்து
 கொண்டு தவம்புரியும் பிலம்; காஞ்சீபுரம். இது சத்தபுரிகளுள் ஒன்று;
 கச்சியேகம்பம், கச்சிமேற்றளி, கச்சியனேகதங்காவதம், கச்சிமயானம்,
 ஓணகாந்தன்றளி, கச்சிநெறிக் காரைக்காடு என்னும் திருப்பதிகளைத்
 தன்னகத்துடையது. மூவர் தேவாரமும் பெற்ற தொண்டை நாட்டுப்
 பெரும்பதி. இதன் பெருமைகள் அளவிறந்தன; அவற்றைக் காஞ்சிப்
 புராணம் முதலியவற்றானறிக. பிலம், ஆகுபெயர். (13)
 
	
	| திருமறு மார்பன் காவற் செயல்பெற வரனைப் பூசித் திருகர முகிழ்த்து நேர்நின் றேத்திட மிதுவா மோத்தின்
 உரைவரம் பகன்ற முக்க ணுத்தமன் சந்தை கூட்டி
 அருமறை யறவோர்க் கோது வித்திட மதனைக் காண்மின்.
 |       (இ 
        - ள்.) திருமறு மார்பன் - திருமகளையும் மறுவினையுமுடைய மார்பினை யுடைய திருமால், காவல் செயல்பெற - காவற்றொழிலைப்
 பெறுதற்கு, அரனைப் பூசித்து - சிவபெருமானை வழிபட்டு, இருகரம்
 முகிழ்த்து நேர்நின்று ஏத்து இடம் இது - இரண்டு கைகளையுங் கூப்பி
 எதிர்நின்று துதித்த திருமாற் பேறென்னும் பதி இது; ஓத்தின் உரைவரம்பு
 அகன்ற முக்கண் உத்தமன் - மறையி்ன்பொருளெல்லையைக் கடந்த
 முக்கண்ணிறைவன், அறவோர்க்கு சந்தை கூட்டி அருமறை ஓதுவித்த இடம்
 அதனைக் காண்மின் - முனிவருக்குச் சந்தை கூட்டி அரிய மறையினை
 ஓதுவித்த இடமாகிய அத்திருவோத்தூரைக் காணுங்கள்.
       மறு 
        - ஸ்ரீவத்ஸம். திருவாகிய மறு என்றுமாம். ஏத்திடம் - திருமாற்பேறு; திருமால் கண்ணினை இடந்து பூசித்து இறைவன்பாற் சக்கரம்
 பெற்றது; இது திருஞான சம்பந்தர், திருநாவுக்கரையர் என்னும் இருவர்
 தேவாரம் பெற்ற தொண்டை நாட்டுத் திருப்பதி. சந்தை அநுட்டு முதலிய
 சந்தசுகள்; சந்தை கூட்டி என்பதற்கு வேதவாக்கியங்களை ஒருசேரச்
 சொல்வித்து என்றுரைப்பாருமுளர். ஓதுவித்த என்பதன் அகரம் விகாரத்தால்
 தொக்கது. ஓதுவித்த இடம் - சிவபெருமான் தேவர்கட்கும் முனிவர்கட்கும்
 வேதத்தை ஓதுவித்த தலம்; திருவோத்தூர்; இது திருஞானசம்பந்தப்
 பெருமான் பதிகம்பாடி ஆண்பனையைப் பெண்பனையாக்கிய அற்புதம்
 நிகழப்பெற்றது; திருஞான சம்பந்தர் தேவாரம் பெற்ற தொண்டைநாட்டுத்
 திருப்பதி.
 
	
	      | ழுகுரும்பை யாண்பனை யீன்குலை யோத்தூர் அரும்பு கொன்றை யடிகளைப்
 பெரும்பு கலியுண் ஞானசம் பந்தன்சொல்ல
 விரும்பு வார்வினை வீடேழு
 |  என்னும் சம்பந்தர் 
        திருக்கடைக் காப்பு நோக்கற்பாலது. (14)  
	
	| அடிமுடி விலங்கும் புள்ளு மளந்திடா தண்டங் கீண்டு நெடுகிய நெருப்பு நின்ற நிலையிது முள்வாய்க் கங்க
 வடிவெடுத் திருவர் நோற்கு மலையிது பல்வே றூழி
 இடையுற முன்னும் பின்னு மிருக்குமக் குன்றைக் காண்மின்.
 |  |