| 
	
	| மடம்படு மறிவு நீங்கி வல்வினைப் பாசம் வீசித் திடம்படு மறிவு கூர்ந்து சிவபரஞ் சோதி பாதத்
 திடம்படு மன்பு வாவென் றீர்த்தெழ வெழுந்து நாரை
 தடம்படு மாடக் கூடற் றனிநக ரடைந்து மாதோ.
 |        (இ 
        - ள்.) மடம்படும் அறிவு நீங்கி - அறியாமையோடு கூடிய அறிவு நீங்கப் பெற்று, வல்வினைப்பாசம் வீசி - வலிய வினைக்கட்டை அறுத்து,
 திடம்படும் அறிவு கூர்ந்து - உறுதியாகிய மெய்யுணர்வு பெற்று, சிவபரஞ்
 சோதி - பாதத்து இடம்பாடும் அன்பு - சிவபரஞ் சுடரின் திருவடிக்கண்
 பரந்த அன்பு, வா என்று ஈர்த்து எழ - வருவாயாக என்று இழுக்க, நாரை
 எழுந்து - நாரையானது புறப்பட்டு, தடம்படும் மாடக் கூடல் தனி நகர்
 அடைந்து - அகன்ற மாடங்கள் நிறைந்த கூடலாகிய ஒப்பற்ற பதியை
 அடைந்து.
       மடம்படும் 
        அறிவு - சிற்றறிவு. திடம்படும் அறிவு - மெய்யுணர்வு. மாது, ஓ : அசைகள். (14)
 
	
	| வாங்கிய திரைசூழ் பொற்றா மரைபடிந் திமையா வேழந் தாங்கிய விமான மேய தலைவனைத் தாழ்ந்து சூழ்ந்து
 தேங்கிய வருட்க ணோக்கத் தெரிசித்துத்* திருமுன் வைகி
 ஓங்கிய கருணை மேனி யுள்ளுறத் தியானஞ் செய்து.
 |       (இ 
        - ள்.) வாங்கிய திரைசூழ் பொற்றாமரை படிந்து - வளைந்த அலைகள் சூழ்ந்த பொற்றாமரையின்கண் நீராடி. இமையா வேழம் தாங்கிய
 விமானம் மேய - இமையாத யானைகளால் தாங்கப்பட்ட விமானத்தின் கண்
 எழுந்தருளிய, தலைவனை - சோம சுந்தரக் கடவுளை, தாழ்ந்து சூழ்ந்து -
 வணங்கி வலம் வந்து, தேங்கிய அருள் கண் நோக்க - அவ்விறைவன்
 நிறைந்த அருளையுடைய திருக்கண்ணாற் பார்த்தருள, தெரிசித்து - அவனது
 அருளுருவைத் தரிசனஞ் செய்து, திருமுன் வைகி - திருமுன் இருந்து,
 கருணை ஓங்கிய மேனி - கருணை நிறைந்த திருமேனியை, உள்ளுறத்
 தியானம் செய்து - உள்ளே பொருந்தத் தியானித்து.
       இறைவன் 
        அருட்கண்ணால் நோக்க அதனாற் றரிசித்தலை, 
        
          | "கண்ணுதலான் 
            றன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற் கெட்டா வெழிலார் கழலிறைஞ்சி"
 |  எனத் திருவாதவூரடிகள் 
        அருளிச் செய்தல் காண்க. (15)  
         
          | இந்நிலை 
            நியம மூவைந் தெல்லைஞான் றியன்று பின்னாள் அந்நிலை யொழுகு நாரை யாடக கமலந் தோய்வான்
 வன்னிலை மதில்சூழ் ஞாங்கர் வந்துழிப் பசியால் வெந்து
 மின்னிலை வேல்போற் றுள்ளு மீன்கவர்ந் துண்கு மென்னா.
 |  
 (பா 
      - ம்.) * நோக்கந் தெரிசித்து.
 |