|       (இ 
        - ள்.) குட புலத்து அரசும் - மேற்புலத் 
        தரசனாகிய சேரனும், பொன்னிக் குளிர் புனல் கோழி வேந்தும் - காவிரியின்தண்ணிய நீர் சூழ்ந்த
 உறையூரிலுள்ள சோழ மன்னனும், வடபுலத்து அரசர் யாரும் - வடக்கின்கண்
 உள்ள அரசரனைவரும், குறுநில வாழ்க்கைச் செல்வத்து - குறுநில வேந்தரின்
 வாழ்க்கைச் செல்வத்தினையுடைய, அடல்கெழு - வலிமை பொருந்திய,
 தண்தார் - தண்ணிய மாலையை யணிந்த, தொண்டை அரசொடும் -
 தொண்டை மன்னனோடும், அனிகம் சூழ - சேனைகள் சூழ - கடல்கள் நால்
 திசையும் பொங்கி வருவபோல் - கடல்கள் நான்கு திக்குகளிலும் புடை
 பெயர்ந்து வருவன போல, கலிப்ப வந்தார் - ஆரவார முண்டாக வந்தார்கள்
 எ - று.
       குளிர் 
        புனலையுடைய பொன்னியென மாற்றலுமாம். ஒரு கோழி யானையைப் போர்தொலைத்த விடத்துக் கண்ட நகர மாதலின் உறை
 யூர்க்குக் கோழி யென்பது ஒரு பெயர்;
 
        
          | "மறஞ்செவி வாரண 
            முன்சம முருக்கிய புறஞ்சிறை வாரணம் புக்கனர்"
 |  என்று சிலப்பதிகாரம் 
        கூறுவதுங் காண்க. வடபுலத் தரசர் - வடுக வரசர் முதலாயினார். தொண்டை அரசு - தொண்டை நாடாளும் அரசன்;
 தொண்டைமான். தமிழகத்தில் முடியுடை வேந்தர் மூவரு மொழிந்த ஏனை
 யரசரெல்லாம் குறுநில மன்னரெனப் படுவர். படைப்பெருமையாலும்
 ஆரவாரத்தாலும் கடல்கள் பொங்கி வருவ போல் என்றார். வருவ என்பது
 தொழிற் பெயராய் நின்றது. (17)
 
	
	| மன்னனைத் தேவி தன்னை முறையினால் வழுத்தி வாழ்த்தி நன்னர்கோ ளாகி யோகை நவின்றுவெண் மழுவா னீத்த
 தென்னவர் பெருமான் றேவி திருமுகக் கருணை பெற்றுப்
 பொன்னடி பணிந்து தம்மூர்ப் போகுவா ரினைய சொல்வார்.
 |       (இ 
        - ள்.) மன்னனைத் தேவி தன்னை - சுந்தர பாண்டியரையும் தடாதகைப் பிராட்டியாரையும், முறையினால் வழுத்தி வாழ்த்தி - முறைப்படி
 துதித்து வாழ்த்தி, நன்னர்கோள் ஆகி - (அவர்களால்) நன்கு ஏற்றுக்
 கொள்ளப்பட்டவர்களாய், ஓகை நவின்று - மகிழ்ச்சி மொழிகளைப் பேசி,
 வெண் மழுமான் நீத்த தென்னவர் பெருமான் தேவி திருமுகக் கருணை
 பெற்று - வெள்ளிய மழுவையும் மானையும் நீத்துவந்த அப் பாண்டியர்
 தலைவனும் பிராட்டியாருமாகிய இவர்களின் திருமுகக் கருணையைப்பெற்று,
 பொன் அடி பணிந்து தம்ஊர் போகுவார் - (அவர்களுடைய) பொன்போலுந்
 திருவடிகளை வணங்கித் தத்தம் இடங்களுக்குச் செல்கின்றவர்கள், இனைய
 சொல்வார் - இத்தன்மையவற்றைக் கூறலுற்றார்கள் எ - று.
       நன்னர் 
        - நன்கு : பண்புப் பெயர். கோள் என்பது ஆகு பெயராய்க் கொள்ளப்பட்டவர் என்னும் பொருளில் வந்தது. ஓகை - உவகை;
 மொழகளுக்காயிற்று. நவிலுதல் - வினாவியும் விடுத்தும் அளவளாவுதல்,
 பெருமான் கருணையும் தேவி கருணையும் எனக் கூட்டுக. ஊர் புகுவார் :
 ஏழாம் வேற்றுமையில் இயல்பாயிற்று; "வாய்புகுவதனினும்" என்புழிப்போல,
 புகுவார் : வினைப்பெயர். (18)
 |