| 
        
	      | ஆடு கொடியுந் தோரணமும் புனைவித் தழகுக் கழகாகக்
 கூட நெருங்கு நகரைமணக்
 கோலம் 
        பெருகக் கொளுத்தினார்.
 |       (இ 
        - ள்.) மாடம் புதுக்கி - (அந்நகரத்தார்) தங்கள் தங்கள் மாளிகைகளைச் சுண்ண முதலியவற்றாற் புதுக்கி, பூகதமும் கதலிக்காடும்
 மறுகு எங்கும் நீட நிரைத்து - கமுகமரங்களையும் வாழைமரக் காடுகளையும்
 வீதிகளெங்கும் மிக வரிசையாக நிறுத்தி, பாலிகையும் பொன்நிறை குடமும்
 முறை நிறுத்தி - முளைப்பாலிகையையும் பொன்னாலாகிய நிறை குடங்களைம்
 முறைப்படி வேதிகைதோறும் அமைத்து, ஆடு கொடியும் தோரணமும்
 புனைவித்து - அசைகின்ற கொடிகளையும் தோரணங்களையும் கட்டி,
 அழகுக்கு அழகாக - அழகக்கு அழகு செய்பவராக, கூடம் நெருங்கும்நகரை
 - கூடங்கள் நெருங்கிய அப்பதியை, மணக்கோலம் பெருகக் கொளுத்தினார்
 - திருமண அழகு பொலிய அலங்கரித்தார்கள் எ-று.
       பூகதம், 
        தகரம விரித்தல். மிகுதி தோன்றக் காடு என்றார் நீட - மிக. இயற்கையின் அழகெல்லாம் முற்றுப்பெற்ற அந்நகர்க்கு மேலும் அழகு
 செய்தாரென்பார் ழேகுக் கழகாக என்றார். கூடம் - மண்டபம் முதலாயின.
 (11)
 
        
	| தென்ற னாடன் றிருமகளைத் தேவர் பெருமான் மணம்புரிய
 மன்ற லழா லொருநகரொப்
 பதிக மின்றி மதுரைநகர்
 அன்று தானே தனக்கொப்ப
 தாகும் வண்ண மணியமைத்தார்
 இன்று தானே தனக்கதிக
 மென்னும் 
        வண்ண மெழிலமைத்தார்.
 |       (இ 
        - ள்.) தென்றல் நாடன் திருமகளை - தென்றல் தோன்றும் பாண்டி நாட்டினை உடையவனாகிய மலயத்துவசன் திருமகளாகிய தடாதகைப்
 பிராட்டியாரை, தேவர் பெருமான் மணம்புரிய - தேவ தேவனாகிய
 சுந்தரபாண்டியன் திருமணம் புரிய, மன்றல் அழகால் - அத் திருமண
 அழகினால், ஒரு நகர் ஒப்பு அதிகம் இன்றி - மற்றொரு நகரம் ஈடும்
 எடுப்புமில்லையாக, மதுரை நகர் தனக்குத் தானே ஒப்பது ஆகும் வண்ணம்
 - மதுரைப்பதியானது தனக்குத்தானே ஒப்பாகுமாறு, அன்று அணி அமைத்தார் - அந்நாளில் 
        அணி செய்தார்கள்; இன்று - இப்பொழுது, தனக்குத்தானே
 அதிகம் என்னும் வண்ணம் எழில் அமைத்தார். தனக்குத்தானே மிக்கது
 என்னும்படி அழகு செய்தார்கள் எ - று.
       தென்றல் 
        - தெற்கிலிருந்து வரும் காற்று. பாண்டிய நாடு தெற்கெல்லையிலுள்ளதாகலின் அதனைத் தென்றல் நாடு என்றார். ஒரு நகர்
 - பிறிதொரு நகரும். ஒப்பதிகம் இன்றி யென்றமையாலே தனக்குத் தானே
 |