|  
        என்பது இராமாயணம். 
        உம்பர் தேத்தும் என்பதனை உம்பராகிய தேத்து  
        மென்றாவது, உம்பரது தேத்து மென்றாவது விரித்துரைத்துக் கொள்க; தேம் -  
        இடம்; தேத்துமென்னும் உம்மை எச்சமும் சிறப்புமாம். இரங்கல் - ஒலித்தல்;  
        கூவுதல். (43)  
      
      
         
          அங்கது கேட்டோர் 
            யாரு மகங்களி துளும்ப விப்பாற் 
            கொங்கலர் நறுந்தார்க் குஞ்சி யுக்கிர வழுதி* போந்து 
            மங்கல வரிசை மாண மத்தமான்+ சுமந்த வையைச் 
            சங்கெறி துறைநீ ராடித் தகுங்கடி வனப்புக் கொள்வான்.  | 
         
       
       
           (இ 
        - ள்.) அங்கு அது கேட்டோர் யாரும் அகம் களி துளும்ப -  
        அங்கு அதனைக் கேட்ட அனைவரும் மனம் மகிழ் சிறந்திருக்க, இப்பால் -  
        பின்பு, கொங்கு அலர் நறுந்தார்க் குஞ்சி உக்கிர வழுதி போந்து -  
        மகரந்தத்துடன் மலர்ந்த நறுமணமுடைய மலர் மாலையை அணிந்த  
        சிகையினையுடைய உக்கிர வழுதி (அவணின்றும்) எழுந்து, மங்கல வரிசை  
        மாண -அட்ட மங்கல வரிசைகளும் சிறக்க. மத்த மான் சுமந்த - மதச்  
        செருக்குடைய யானையால் சுமந்து வரப் பெற்ற, வையை - வையை யாற்றின்,  
        சங்கு எறிதுறை நீர் ஆடி - சங்குகளை வீசும், துறையின் நீரில் ஆடி, தகும்  
        கடி வனப்புக் கொள்வான் - சிறந்த திருமணக்கோலம் கொள்ளத்  
        தொடங்கினான் எ - று. 
            களி 
        துளும்ப வென்னும் சினைவினை முதல் மேல் நின்றது. மத்தம் -  
        மயக்கம்; மதக்களி. சுமந்த நீரி லென்க. (44)  
      
         
          கட்டவிழ் 
            கண்ணி வேய்ந்து மான்மதக் கலவைச் சாந்தம் 
            மட்டனஞ் செய்து முத்தான் மாண்கலன் முழுமுந் தாங்கி 
            விட்டவிர் கலைவான் றிங்கள் வெண்கதிர்ச் செல்வன் போல்வந் 
            திட்டபூந் தவிசின் மேற்கொண் டிருந்தனன் சங்க மேங்க.  | 
         
       
       
           (இ 
        - ள்.) கட்டு அவிழ் கண்ணி வேய்ந்து - முறுக்கு அவிழ்ந்த மலர்  
        மாலை சூடி, மான்மதக் கலவைச் சாந்தம் மட்டனம் செய்து - மிருக மதங்  
        கலந்த கலவையாகிய சந்தனத்தை அப்பி, முத்தால் மாண்கலன் முழுதும்  
        தாங்கி - முத்துக்களால் மாட்சிமைப்பட்ட அணிகளனைத்தையும் அணிந்து,  
        விட்டு அவிர் கலைவான் திங்கள் வெண் கதிர்ச் செல்வன் போல் வந்து -  
        விட்டு (விட்டு) விளங்கும் கலையினையுடைய சந்திரன் போல வந்து, இட்ட  
        பூந்தவிசின் - கல்யான மண்டபத்தில் இட்ட அழகிய ஆதனத்தின் மேல்,  
        சங்கம் ஏங்க மேற் கொண்டு இருந்தனன் - சங்கங்கள் ஒலிக்க ஏறி  
        யிருந்தான் எ - று. 
            கண்ணி 
        - முடியிற் சூடுமாலை. மட்டனஞ் செய்து - மட்டித்து; பூசி.  
        முத்தானியன்ற கலன்களை முழுதுந் தாங்கியிருத்தலின் திங்கட் செல்வன்போ  
        லென்றார்; தன் குல முதல்வனென்பது தோன்றக் கூறினார். (45) 
       
            (பா 
        - ம்.) * உக்கிர குமரன். +மானமத்தமான்.   
     |