|  
             (இ 
        - ள்.) வான யாறு தோய்ந்து உயரிய மலயம் - ஆகாய  
        கங்கையை அளாவி உயர்ந்த பொதியின் மலை, முக்கண் ஞான நாயகன் -  
        மூன்று கண்களையுடைய ஞான முதல்வனாகிய சிவபிரானையும், அம் மலை  
        போர்த்த கார் - அப்பொதியின் மலையாற் போர்க்கப் பெற்ற முகில், நால்  
        வாய் யானை ஈர் உரி - தொங்குகின்ற வாயினையுடைய யானையினின்றும்  
        உரித்து (அவ்விறைவனாற் போர்க்கப் பெற்ற) தோலையும், அம்மழை அசம்பு  
        - அம் முகிலின் மழைத்துளிகள், அதன் புண்நீர் - அவ்வியானையுன்  
        குருதியையும், கூனல் வான்சிலை - (அதனிற் காணப்படும்) வளைந்த  
        இந்திரவில், குருதி தோய் கோடு - (அவ்வி யானையின்) உதிரந் தோய்ந்த  
        கொம்பினையும், போன்றன்று - ஒத்தது எ - று. 
            வானயாறு 
        தோய்தல் மலயத்திற்கும் இறைவனுக்கும் பொது.  
        தோய்ந்து என்பதனை மலைக்கேற்றுங்கால் தோய என்பதன் திரிபெனக்  
        கொள்ளலுமாம். ஏகாரமிரண்டும் அசை. 
           யானையுரித்த 
        வரலாறு : - யானையுருவினையுடைய கயாசுரன்  
        என்பவன் பிரமனைக்குறித்து அருந்தவம் புரிந்து வரங்கள் பெற்றுத் தேவர்  
        முதலியோர்க்கு இடுக்கண் விளைத்துத் திரியாநின்றவன், ஒரு கால்  
        தன்னைக் கண்டஞ்சிய முனிவர்களைத் துரந்து வந்தனன். அப்பொழுது,  
        முனிவர்கள் சிவபெருமானைச் சரண்புக இறைவன் அவனைக் கொன்று  
        தோலையுரித்துப் போர்த்தருளினன் என்பது; இதனைக் கந்தபுராணத்துட் 
         
        காண்க. (44)  
      
	
	 சுனைய கன்கரைச் சூழல்வாய்ச் சுரும்புசூழ் கிடப்ப 
	நனைய விழ்ந்தசெங் காந்தண்மே னாகிள வேங்கைச் 
	சினைய விழ்ந்தவீ கிடப்பபொன் றோய்கலத் தெண்ணீர் 
	அனைய பொன்சுடு நெருப்பொடு கரியிருந் தனைய. | 
	 
	 
	
		
       
           (இ 
        - ள்.) சுனை - சுனையும், அகன்கரைச் சூழல்வாய் -  
        அதனகன்ற கரையின்கண், சூழ்கிடப்ப சுரும்பு - சுற்றி மொய்த்துக் கிடக்கும்  
        வண்டுகளும், பொன்தோற் தெண்நீர் கலம் கரி அனைய - பொன்னைக்  
        காய்ச்சித்தேய்க்கப் பெறுகின்ற தெளிந்த நீரையுடைய பாத்திரத்தையும்  
        கரியையும் ஒத்தன; நனை அவிழ்ந்த செங்காந்தள் மேல் - முகை விரிந்த  
        செங்காந்தள் மலர்மேல், நாகு இள வேங்கைச்சினை அவிழ்ந்தவீ கிடப்ப -  
        மிக்க இளமையாகிய வேங்கை மரத்தின் கிளையில் மலர்ந்த பூக்கள்  
        கிடப்பன, நெருப்பொடு சுடுபொன் இருந்து அனைய - நெருப்பின் மேல்  
        அதனாற் சுடப்படுகின்ற பொன் இருந்தால் ஒத்தன எ - று. 
            பொருளுக் 
        கியையச் சொற்கள் மாற்றி யுரைக்கப்பட்டது. இது  
        மொழிமாற் றெனப்படும். என்னை?  
      
	
	"மெமழிமாற் றியற்கை 
			சொன்னிலை மாற்றிப் பொருளெதி ரியைய 
			முன்னும் பின்னுங் கொள்வழிக் கொளாஅல்"  | 
	 
	 
	
	   
      என ஆசிரியர் தொல்காப்பியனார் 
        கூறினாராகலின். பின்னூலார்  
        இதனைக் கொண்டு கூட்டென்ப. நாகிள : ஒருபொரு ளிருசொல். கிடப்ப :  
        வினைப்பெயர். இருந்தாலனைய என்பது விகாரமாயிற்று. (45)   
       |