|  
        என்னும் கம்பராமாயணப்பாட்டு 
        இதனுடன் ஒருபுடை ஒத்து நோக்கற்பாலது.  
        இச் செய்யுள் உருவகவுயர்வுநவிற்சி. (20)  
      
      
         
          கலையினா 
            னிறைந்த விந்து காந்தமண் டபத்துஞ் * செய்த 
            மலையினு மெழுது மாட மருங்கினு நெருங்கு சோலைத் 
            தலையினுங் கமல வாவித் தடத்தினுந் தண்முத் தார 
            முலையினு மன்றிக் கோடை முடிவிடங் காணார் மைந்தர்.?  | 
         
       
       
            (இ 
        - ள்.) மைந்தர் - ஆடவர்கள், கலையினால் நிறைந்த இந்துகாந்த மண்டபத்தும் 
        - கலைகளால் நிறைந்த சந்திரகாந்தக் கல்லாலாகிய மண்டபத்திலும், செய்த மலையினும் 
        - செய்குன்றிலும், எழுதும் மாட 
        மருங்கினும் - சித்திரம் வரைந்த மாடத்திடத்தும், நெருங்கு சோலைத்தலையினும் - நெருங்கிய 
        சோலையினிடத்தும், கமலவாவித் 
        தடத்தினும் - தாமரையையுடைய பொய்கையினிடத்தும், தண்முத்து  
        ஆரம்முலையினும் - குளிர்ந்த முத்தாரமணிந்த மகளிர் கொங்கைகளிலும்,  
        அன்றி - அல்லாமல், கோடைமுடிவு இடம் காணார் - வேனில் வெம்மையை  
        ஆற்றும் இடம் வேறு காணார். 
            கலை 
        நிறைதல் இந்துவுக்கு அடை. இந்து காந்தம் - சந்திரனைக்கண்டு நீர் கக்கும் கல். எழுது 
        மாடம் - சித்திர மண்டபம், சந்திரகாந்த மண்டபம் முதலிய இடங்களில் மகளிர் முலைத்தடத்தில் 
        என்பது கருத்தாகக் கொள்க. (21)  
      
      
        
	நிலந்தரு திருவி னான்ற னிழன்மணி ? மாடக் கூடல் 
		வலந்தரு தடந்தோண் மைந்தர் வானமும் வீழும் போக 
		நலந்தரு மகளி ரோடு நாகநா டவர்தஞ் செல்வப் 
		பொலந்தரு வனைய காட்சிப் பூம்பொழி னுகர்வான் போவார்.  | 
	 
	 
		
	
		
       
           (இ 
        - ள்.) நிலம்தரு திருவினான்தன் - மாற்றாரது நிலத்தைத்தரும்  
        போர்த்திருவினையுடைய வங்கிய சூடாமணி மாறனது, நிழல் மணிமாடக்கூடல்  
        - ஒளியினையுடைய மணிகள் அழுத்திய மாடங்கள் நிறைந்த கூடலிலுள்ள,  
        வலம் தருதடம் தோள்மைந்தர் - வெற்றியைத் தரும் பெரிய 
        தோள்களையுடைய காளையர், வானமும் வீழும் போக நலம்தரு மகளிரோடு  
        - விண்ணவரும் விரும்பும் இன்ப நலத்தை அளிக்கும் மாதராருடன்,  
        நாகநாடவர்தம் செல்வப் பொலம்தரு அனைய காட்சி - அவ்வான நாடரின்  
        செல்வமிக்க பொன்மயமாகிய கற்பகச்சோலைபோன்ற தோற்றத்தையுடைய,  
        பூம்பொழில் நுகர்வான் போவார் - பூஞ்சோலையின் இன்பத்தை நுகர்தற்குப்  
        போவாராயினர். 
      
        
          | "நிலந்தரு திருவிற் 
            பாண்டியன்"  | 
         
       
      என்னும் தொல்காப்பியப் 
        பாயிரவடிக்கு நச்சினார்க்கினியர் கூறிய  
        பாருள்காணற் பாலது; நிலந்தரு திருவினான்ற எனப் பாடமோதி,  
        மரக்கலத்தாலுமன்றி நிலவுலகு தருஞ்செல்வத்தால் நிறைந்த என்று  
      
   |