| 
        
	| பங்கவன் மதுரைப் பதிபுகுந் தம்பொற் பன்மணிக் கோயில்புக் காழிச்
 சங்கவன் கைபோல் வளைசெறி செம்பொற்
 றாமரைத் தடாகநீ ராடி.
 |        (இ 
        - ள்.) அவன் திருமுன் அருந்தவ விரதம் ஆற்றுவான் அங்கு செல்லுமின் என - அந்த மூர்த்தியின் திருமுன்னர் இருந்து அரிய தவமாகிய
 நோன்பைச் செய்தற்கு அங்கே செல்லுங்கள் என்று கூற, அப் புங்கவன்
 அருள்போல் வந்த மாதவன் பின் - அந்தத் தேவனது திருவருளே போலும்
 வந்த மாதவனாகிய அரபத்தன் பின்பு, புனிதம் மாமுனிவரும் - தூய
 பெருமையுடைய முனிவர்களும், நங்கை பங்கவன் மதுரைப் பதி புகுந்து -
 உமையொரு பாகனாகிய சோமசுந்தரக் கடவுளின் மதுரைப்பதியிற்சென்று,
 அம்பொன் பல்மணிக் கோயில் புக்கு - அழகிய பொன்னாற் செய்த பல்வகை
 மணிகள் இழைத்த திருக்கோயிலுட்புகுந்து, ஆழிச் சங்கவன் கைபோல் -
 திகிரிப்படையை யுடைய திருமாலின் சங்கை ஏந்திய கைபோல, வளைசெறி
 செம்பொன் தாமரைத் தடாகம் நீராடி - சங்கு பொருந்திய சிவந்த பொற்றா
 மரையையுடைய வாவியில் நீராடி எ - று.
       மாதவன் 
        பின் என்றமையால் அவனும் சென்றா னென்பது பெறப்பட்டது. இறைவனை வழிபடுதற்கு அம்முனிவன் 
        அழைத்துச் செல்லுதலை அவனது அருளேவந்து ஈர்த்துச் செல்வது போலும் என உவமை கூறியது சாலவும்
 பொருத்த முடைத்து;
 
        
          | "அவனரு ளாலே 
            யவன்றாள் வணங்கி" |  என்று திருவாசகத் 
        திருமறை அருளிச்செய்தல் காண்க. பங்கவன் : வகரம் விரித்தல். ஆழியான் சங்கக் கைபோல் என விகுதி பிரித்துக் கூட்டுக. சங்கு
 தாமரை மேல் இருக்குமென்றார்;
 
        
          | "முட்டாட் டாமரை 
            முறுக்கவிழ் மலர்மேல் வலம்புரி கிடக்கும் வாதவூ ரன்ப."
 |  என 
        நால்வர் நான்மணி மாலை கூறுவதுங் காண்க. (10)  
        
	| கரைகடந் துள்ளங் கடந்தவன் புந்தக் கடிதுபோய் நான்கிரு வெள்ளி
 வரைகடம் பிடரிற் கிடந்ததோர் மேரு
 வரைபுரை விமானமேற் காணா
 உரைகடம் பொருளைக் கண்களாற் கண்டாங்
 கும்பர்தம் பிரானைநேர் கண்டு
 திரைகடந் திடும்பே ரின்பவா ரியிலுஞ்
 சேணிலத் திலும்விழுந் தெழுந்தார்.
 |       (இ 
        - ள்.) கரை கடந்து உள்ளம் கடந்த அன்பு - எல்லையின்றி உள்ளத்தை விழுங்கி எழுந்த அன்பானது, உந்த - செலுத்த, கடிது போய் -
 |