|       விஞ்சையன் 
        - கல்வி வல்லோன்; புலவன். இகல்மானம் - வலிய மானமும் ஆம். மானம் - தாழ்தற்கு ஒருப்படாமை. மன்றுள் ஆடும்
 ஆடலை யென விரிக்க. விரும்பியதனை வியந்து வேட்டதே என்றான்
 கொல், ஆம் : அசைகள். விதி - ஆணை, கட்டளை. கற்பான்.
 வினையெச்சம். (6)
 
        
          | [எழுசீரடி 
              யாசிரிய விருத்தம்]  |   
          | ஆடனூல் வரம்பு 
            கண்டவ ராகி யவ்வழி யாடலும் பயின்ற
 நாடக நடைதேர் புலவரைத் துருவி
 நண்ணிய வவர்க்கெலா மகிழ்ச்சி
 வீடருஞ் சிறப்பா லறுவையும் பூணும்
 வெறுக்கையும் வெறுத்திடக் கொடுத்துப்
 பாடல்வண் டரற்றுந் தாரினான் பரதப்
 பனுவலுங் கசடறப் பயில்வான்.
 |       (இ 
        - ள்.) ஆடல் நூல் வரம்பு கண்டவராகி - நாடக நூலின் எல்லையைக் கண்டவராய் அவ்வழி ஆடலும் பயின்ற நாடக நடைதேர்
 புலவரைத் துருவி - அந்நூலிற் கூறிய வழியே ஆடுதலிலும் பழகிய நாடக
 நடையிற் றேர்ச்சி பெற்ற புலவரைத் தேடி, நண்ணிய அவர்க்கு எலாம் -
 வந்த அப்புலவரனைவர்க்கும், மகிழ்ச்சி வீடு அருஞ் சிறப்பால் மகிழ்ச்சி
 நீங்குதலில்லாத வரிசையினால், அறுவையும் பூணும வெறுக்கையும்
 வெறுத்திடக் கொடுத்து - ஆடையும் அணியும் பொன்னுமாகியவற்றை
 (அவர்கள்) விருப்பமொழியக் கொடுத்து, பாடல் வண்டு அரற்றும்
 தாரினான் - இசைபாடுதலையுடைய வண்டுகள் ஒலிக்கும் மாலையை
 யணிந்த பாண்டியன் (அவர்களிடம்,) பரதப் பனுவலும் கசடு அறப்
 பயில்வான் - நாடக நூலையும் குற்றமற்க கற்கத் தொடங்கினான்.
       நாடக 
        நடை நாடக வொழுக்கம். துருவி - ஆராய்ந்து அழைத்து.சிறப்பால் - வரிசையாக. வெறுத்திட - அவாவடங்க; பின்
 வேண்டுதலல்லையாக : மிக என்றுமாம்.
 
        
          | "உற்றுழி யுதவியும் 
            உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே"
 |  என்பவாகலின் வெறுத்திடக் 
        கொடுத்து என்றார். மீனவனாகிய தாரினான் என்க. பனுவலும், உம்மை எச்சப்பொருட்டு. (7)
 
        
	      | பாவமோ டராகந் 
            தாளமிம் மூன்றும் பகர்ந்திடு முறையினாற் பரதம்
 ஆவயி னங்க முபாங்கமே பிரத்தி
 யாங்கமே யலர்முக ராகம்
 |  |