I


வேதத்துக்குப் பொருளருளிச் செய்த படலம்635



பண்ணிய தவத்தா லன்றியா தானும்
     படுபொருள் பிறிதிலை தவமும்
புண்ணிய தலத்தி னல்லது பலியா
     புண்ணிய தலத்தினும் விழுப்பம்
நண்ணிய சைவ தலத்தினி லியற்றி
     னல்குமச் சிவதலங் களினும்
எண்ணிய வதிக தலத்தினி லியற்றி
     னிருந்தவ மெளிதுடன் பயக்கும்.

     (இ - ள்.) பண்ணிய தவத்தால் அன்றி - செய்த தவத்தினாலல்லாமல்,
பிறிது யாதானும் படுபொருள் இலை - வேறு யாதொன்றினாலும் கைகூடும்
பொருள் இல்லை; தவமும் புண்ணிய தலத்தின் அல்லது பலியா -
அத்தவங்களும் புண்ணியப் பதிகளினன்றிச் சித்திக்க மாட்டா; புண்ணிய
தலத்தினும் விழுப்பம் நண்ணிய சைவ தலத்தினில் இயற்றின் நல்கும் -
அந்தப் புண்ணியப் பதிகளினும் சிறப்புப் பொருந்திய சிவத் தலங்களிற்
செய்தால் (எளிதிற்) பயனளிக்கும்; அச் சிவத் தலங்களினும் - அந்தச் சைவ
தலங்களினும், எண்ணிய அதிக தலத்தினில் இயற்றின் - மதிக்கப்பெற்ற
சிறந்த சிவத்தலத்தில் செய்தால், இருந்தவம் எளிது. உடன் பயக்கும் -
அப்பெரிய தவங்கள் எளிதாக விரைந்து பயனளிக்கும் எ - று.

     பிறிது யாதானும் எனக் கூட்டுக. யாதானும் - யாதினானும். படு
பொருள் இலை என்பதனைப் பொருள் படுதல் இலையெனப் பிரித்தியைக்க;

"வேண்டிய வேண்டியாங் கெய்தலாற் செய்தவம்
ஈண்டு முயலப் படும்"                   (திருக்குறள் - 265)

என்னும் திருக்குறள் இங்கு நோக்கற்பாலது. தலத்தினுள்ளும்
தலங்களினுள்ளும் என உள்ளுருபு விரிக்க. எண்ணிய - ஆன்றோரால்
எண்ணப்பட்ட. அதிக தலம் - விசேடத்தலம். (7)

அத்தகு தலமற் றியாதெனி னுலக
     மகிலமுந் தன்னுடம் பான
வித்தகன் சென்னிப் பன்னிரு விரன்மேல்
     விளங்கிய தலமது சீவன்
முத்தரா யெண்ணில் வானவர் முனிவோர்
     முயன்றுமா தவப்பய னடைந்து
சித்தமா சகன்று வதிவதென் றறநூல்
     செப்பிய மதுரையந் நகரில்.

     (இ - ள்.) அத்தகு தலம் யாது எனில் - அந்தச் சிறந்த பதி
யாதெனில். அது - அஃது உலகம் அகிலமும் தன் உடம்பான வித்தகன் -
உலக மனைத்தும் தனது வடிவமாகவுள்ள விராட்புருடனது, சென்னிப்