கதிர்கலம்பெய் காட்சிபோல்
உதிர்பழத்தி னுடலெலாம்
புதைபடக் கிடந்தனர்
மதரரித் தடங்கணார். |
(இ
- ள்.) மதர் அரி தடங்கணார் - மதர்த்த அரி பரந்த பெரிய
கண்களையுடைய அம்மகளிர், கதிர் கலம்பெய் காட்சிபோல் உதிர் பழத்தின்
- (வேட்கோவர் வனைந்த) ஒளிவிடுகின்ற புதுக்கலம் வீழுந் தோற்றம்போல
உதிர்கின்ற ஆலம் பழத்தினால், உடல் எலாம் புதை படக் கிடந்தனர் -
உடல் முழுதும் புதையக் கிடந்தனர்.
கதிர்
கலம் : வினைத்தொகை; இயல்பாகலின்.
"புதுக்கலத் தன்ன
கனிய வாலாம்" |
என ஐங்குறு
நூற்றிலும்,
"புதுக்கலம் போலும்
பூங்கனி யாலும்" |
எனச் சீவகசிந்தாமணியிலும்
ஆலம் பழத்திற்குப் புதுக்கலம் உவமையாக
வந்துள்ளமை காண்க. (12)
பருவமா யிரங்கழிந்
தொருவமாட மதுரையெங்
குரவனெண் குணத்தினான்
திருவுளந் திரும்பினான். |
(இ
- ள்.) ஆயிரம் பருவம் கழிந்து ஒருவ - ஆயிரம் ஆண்டும்
கழிந்துபோக, மாடமதுரை எம் குரவன் - மாடங்கள் நிறைந்த மதுரையின்கண்
எழுந்தருளியுள்ள எம் குரவனும், எண் குணத்தினான் - எட்டுக் குணங்களை
யுடையவனுமாகிய சோமசுந்தரக் கடவுள், திருவுளம் திரும்பினான் - தனது
திருவுளத்திற் கருணை கொண்டருளினான்.
பருவம்
என்றது ஈண்டு ஆண்டினை. நீங்க அதன்பின் என்க. உளந்
திரும்புதல் - கருணை கூர்தல். (13)
தன்னதிச்சை கொண்டதோர்
இன்னருட் குரவனாய்
அந்நெடுங்க லாயினார்
முன்னர்வந்து தோன்றினான். |
(இ
- ள்.) தன்னது இச்சை கொண்டது ஓர் இன் அருள் குரவனாய் -
தனது இச்சையினாலே திருமேனி கொண்டருளிய இனிய கருடைிணக்
குரவனாகி, அந்நெடுங்கல் ஆயினார் முன்னர் வந்து தோன்றினான் - நீண்ட
கருங்கல்லாய்க் கிடக்கும் அப்பெண்களின் முன்வந்து தோன்றியருளினான்.
|