|
அடுத்தவன்
- வெற்று நாட்டிலிருந்து வந்தவன். எழீஇ, சொல்லிசை
யளபெடை. சுருதி மடுத்து என்பதற்குப் பண்ணமைத்து என்றுரைத்தலுமாம்.
அவன் இசை பாடுவான் வல்லான் யாவன் என்று கருதியென்னலுமாம். (23)
|
[அறுசீரடி
யாசிரிய விருத்தம்]
|
வண்டறை
கொன்றை யான்முன் வந்துநீ யாரை யென்றான்
பண்டரு விபஞ்சி* பாணபத்திர னடிமை யென்றான்
முண்டக மலரோன் மாயோன் புரந்தரன் முதன்மற் றேனை
அண்டருந் தன்குற் றேவ லடிமையாக் கொண்ட வம்மான். |
(இ
- ள்.) வண்டு அறை கொன்றையான் முன் வந்து - வண்டுகள்
ஒலிக்கின்ற கொன்றை மாலையையணிந்த இறைவன் திருமுன் வந்து, நீ யார்
என்றான் - நீ யாவன் என்று வினாவினான்; முண்டகமலரோன் - தாமரை
மலரை இருக்கையாகவுடைய பிரமனும், மாயோன் - திருமாலும், புரந்தரன்
முதல் மற்று ஏனை அண்டரும் - இந்திரன் முதலிய ஏனைய தேவர்களுமாகிய இவர்களை, தன்
குற்றேவல் அடிமையாக் கொண்ட அம்மான் - தனது
குற்றேவல் செய்யும் அடிமைகளாகக் கொண்ட இறைவன், பண்தரு விபஞ்சி -
பண்ணமைந்த யாழ் வல்லோனாகிய, பாண பத்திரன் அடிமை என்றான் -
பாணபத்திரன் அடிமை என்று கூறியருளினான்.
யாரை,
ஐகாரம் முன்னிலைக் கண் வந்தது. விபஞ்சி - யாழ்; ஈண்டு
யாழ் வல்லான் என்னும் பொருட்டு. மற்று : அசை. அடிமையென்றான்
இஃதொரு வியப்பிருந்தவாறென்னையென்க.
| "எப்புன்மையரை
மிகவேயுயர்த்தி விண்ணோரைப் பணித்தி" |
என்னும் திருவாசகம்
இங்கே சிந்திக்கற்பாலது. (24)
கனியிசைக்
கிழவன் றன்கீழ்க் கற்பவ ரநேகர் தம்முள்
நனியிசைக் கிழமை வேட்டு நானுமவ் வினைஞ னானேன்
தனியிசைக் கிழவ னோக்கித் தசையெலா மொடுங்க மூத்தாய்
இனியிசைக் கிழமைக் காகா யென்றெனைத் தள்ளி விட்டான்.
|
(இ
- ள்.) கனி இசை கிழவன் தன் கீழ்க் கற்பவர் அநேகர் தம்முள் -
சுவை கனிந்த இசையில் வல்ல அப்பாண பத்திரனிடத்து இசை கற்கும்
மாணவகர் பலருள், இசைக்கிழமை - இசை கற்றற்கு உரியனாதலை, நனி
வேட்டு - மிகவும் விரும்பி, நானும் அவ்வினைஞன் ஆனேன் - நானுங்
கற்குந்தொழிலுடையனானேன்; தனி இசைக் கிழவன் நோக்கி - ஒப்பற்ற
இசைக்குரிய அப்பாணபத்திரன் என்னைப் பார்த்து, தசை எல்லாம் ஒடுங்க
மூத்தாய் - தசை முற்றும் ஒடுங்குமாறு முதியவனாயினை (ஆகலின்,) இனி
இசைக் கிழமைக்கு ஆகாய் என்று - இனி நீ இசை கற்றற்கு உரியனாக
மாட்டாய் என்று கூறி, எனைத் தள்ளிவிட்டான் - என்னை நீக்கிவிட்டான்.
(பா
- ம்.) * விபஞ்சிப்பாண, + பாணன் பத்திரன்.
|