"மாத்திரைக
ளொன்பானுந் தானங்க ளெட்டானும்
ஏத்துங் கிரியையென் நீரைந்தும் - கோத்துப்
பதின்மூன் றெழுத்தாற் றொழிலைந்தும் பண்ணின்
மதியோர்க ளைந்துநிற மாம்" |
என்னுஞ் செய்யுளாலறிக.
நல்யாழ் - குண முழுதும் பொருந்திக் குற்ற
முழுதும் நீங்கின யாழ். குணங்களை,
"சொல்லிய
கொன்றை கருங்காலி மென்முருக்கு
நல்ல குமிழும் தணக்குடனே - மெல்லிலாய்
உத்தம மான மரங்க ளிவை யென்றார்
வித்தக யாழோர் விதி" |
| |
"தளமாய்ச்
சமநிலத்துத் தண்காற்று நான்கும்
உளதா யொருங்கூன மின்றி - அளவ
முதிரா திளகாது மூன்றாங்கூ றாய
அதுவாகில் வீணைத்தண் டாம்" |
"கோடே பத்த
ராணி நரம்பே
மாடக மெனவரும் வகையின வாகும்" |
| |
"செம்பகை யென்பது
பண்ணோ டுளரா
இன்பமி லோசை யென்மனார் புலவர்" |
என்பன முதலியவற்றால்
அறிக. குற்றம் - நரம்பின் குற்றம்; அவை
செம்பகை, ஆர்ப்பு, கூடம், அதிர்வு என்பன : அவற்றின் இயல்பை,
| "ஆர்ப்பெனப்
படுவ தளவிறந் திசைக்கும்" |
| |
| |
"கூட மென்பது
குறியுற விளம்பின்
வாய்வதின் வாராது மழுங்கியிசைப் பதுவே" |
| |
"அதிர்வெனப்
படுவ திழுமென வின்றிச்
சிதறி யுரைக்குந ருச்சரிப் பிசையே" |
என்பவற்றாலறிக. இவை
மரக் குற்றத்தால் வருவன என்பதை,
"நீரிலே நிற்ற லழுகுதல் வேத னிலமயங்கும்
பாரிலே நிற்ற லிடிவீழ்த னோய்மரப் பாற்படல்கோ
ணேரிலே செம்பகை யார்ப்பொடு கூட மதிர்வுநிற்றல்
சேரினேர் பண்க ணிறமயக் கம்படுஞ் சிற்றிடையே" |
என்பதனாலறிக. இம்மேற்கோள்கள்
சிந்தாமணி உரையில்
நச்சினார்க்கினியராற் காட்டப் பெற்றன.
தேனொழுகிற்றென்ன
நரம்பை வீக்கி என்றுமாம். (27)
|