|
பிறையை அணிந்தவனே,
மதியாதவர் மதியில் பதியாய் - கருதாதவர்கள்
கருத்திற் பொருந்தாதவனே, பதினெண் கணமும் பரவும் துதியாய் -
பதினெண் கணங்களாலும் துதிக்கப்படுந் துதியினை யுடையவனே, சரணம்
- வணக்கம், சுடரே சரணம் - பேரொளியா யுள்ளவனே வணக்கம்.
ஆடிய
- பொருந்திய என்றுமாம். மதியாதவர் - சிந்தியாதவர். மதி
தற்போதமாகிய அறிவுமாம். பதிதல் - தங்குதல். பதினெண்கணம் முன்பு
உரைக்கப்பட்டன. (24)
பழையாய்
புதியாய் சரணம் பணிலக்
குழையாய் சரணங் கொடுவெண் மழுவாள்
உழையாய் சரணம் முருகா தவர்பால்
விழையாய் சரணம் விகிர்தா சரணம். |
(இ
- ள்.) பழையாய் - எல்லாவற்றினும் பழமையானவனே, புதியாய்
- எல்லாவற்றினும் புதுமையானவனே, சரணம் - வணக்கம்; பணிலக்
குழையாய் சரணம் - சங்கக் குழையினையுடையவனே வணக்கம்; கொடுவெண்
மழுவாள் உழையாய் சரணம் - கொடிய வெள்ளிய மழுப்படையையும்
மானையுமுடையவனே வணக்கம்; உருகாதவர்பால் விழையாய் சரணம் -
(நின்னை நினைந்து) மனமுருகாத வரிடத்துச் (செல்ல) விரும்பாதவனே
வணக்கம்; விகிர்தா சரணம் - விகிர்தனே வணக்கம்.
இறைவன்
பழமையுடைய எவற்றினும் பழமையுடையனும் புதுமையுடைய
எவற்றினும் புதுமை யுடையனுமாதலை,
"முன்னைப் பழம்
பொருட்கு முன்னைப் பழம் பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே" |
என்னும் திருவாசகத்தானறிக;
எல்லாம் தோன்றுதற்கு முன்னும் எல்லாம்
அழிந்த பின்னும் இருப்பவன் என்பது கருத்து. உருகாதவர் பால்
விழையாமையை,
"உள்ள முருகி
லுடனாவ ரல்லது
தெள்ள வறியரென் றுந்தீபற
சிற்பரச் செல்வரென் றுந்தீபற" |
என்னும் திருவுந்தியாராலும்,
"நெக்கு நெக்கு
நினைப்பவர் நெஞ்சுளே
புக்கு நிற்கும்பொன் னார்சடைப் புண்ணியன்
பொக்க மிக்கவர் பூவுநீருங் கண்டு
நக்கு நிற்ப னவர்தமை நாணியே" |
என்னும் தேவாரத்தாலும் அறிக. விகிர்தன் - வேறுபாடுடையவன். (25)
|