மாலையை யணிந்த கூந்தலையுடையாய்,
உற்ற இக்குற்றம் தன்னால் - நேர்ந்த
இக் குற்றத்தினால்.
இராமுகம்
- இரவினிடம்; இருள். அறியாமையுடைய உள்ளமென்பதனை
இங்ஙனம் இலக்கணையாகக் கூறினார்;
"அகம் குன்றி மூக்கிற் கரியார்" |
எனத் திருக்குறளிலும்;
"கூழின் மலிமனம் போன்றிரு ளாநின்ற கோகிலமே" |
எனத் திருக்கோவையாரிலும்
வருதல் காண்க. (4)
விரதமு மறனு
மின்றி மீன்படுத் திழிஞ ரான
பரதவர் மகளா கென்று பணித்தனன் பணித்த லோடும்
அரதன வாரந் தாழ்ந்த வாரமென் முலையா ளஞ்சி
வரதநிற் பிரிந்து வாழ வல்லனோ வென்று தாழ்ந்தாள். |
(இ
- ள்.) விரதமும் அறனும் இன்றி மீன்படுத்து - நோன்பும்
அறனுமில்லாமல் மீன்களைப் பிடித்துக் கொலைபுரிதலால், இழிஞர் ஆன
பரதவர் மகள் ஆக என்று பணித்தனன் - இழிஞராகக் கருதப்படுகின்ற
பரதவரின் மகளாகக்கடவை என்று கட்டளையிட்டான்; பணித்தலோடும் -
அங்ஙனம் பணித்தவளவில், அரதன ஆரம் தாழ்ந்த - மாணிக்கமாலை
தொங்கியசையும், ஆரம்மென் முலையாள் அஞ்சி - சந்தனக்குழம் பணிந்த
மெல்லிய கொங்கையையுடைய தேவி அச்சுற்று, வரத - வள்ளலே, நின்
பிரிந்து வாழவல்லனோ என்று தாழ்ந்தாள் - யான் நின்னைப்பிரிந்து
வாழவல்லனோ என்று கூறி வணங்கினாள்.
"நோன்பென்பது கொன்று தின்னாமை" |
என்பதனால் கொலை செய்வார் நோன்புடையரல்லராதலையும்,
"அறவினை
யாதெனிற் கொல்லாமை" |
என்பதனால் அவர் அறமுடையரல்லராதலையும்,
"கொலைவினைஞ
ராகியமாக்கள் புலைவினையர்" |
என்பதனால் அவர் இழிவெய்துதலையும் அறிக. (5)
வீங்குநீர்ச்
சடையா னீங்கு மெல்லியல் பிரிவு நோக்கி
வாங்குநீர்க் கானல் வாழ்க்கை வலைஞர்கோன் மகளாய் வைகி
ஆங்குநீ வளர்நாள் யாம்போந் தருங்கடி முடித்து மென்னாத்
தேங்குநீ ரமுதன் னாளைச் செலவிடுத் திருந்தா னிப்பால் |
|